குடியிருப்பு பகுதியில் நுழையும் பாம்புகளால் மக்கள் பீதி!

snake 1 - 2026

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் குடியிருப்புகளில் பாம்புகள் நுழைவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகேயுள்ள மாக்கினாம்பட்டி ஊராட்சியில் பாஸ்கர் நகர், கோபால் நகர்,ஈ.பி.நகர் உள்ளிட்ட தெருக்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

பாஸ்கர் நகர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காலிமனைகள் அதிகம் உள்ளன. இவை பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல், புதர்மண்டிக் காணப்படுகின்றன. இந்த புதர்களில் ஏராளமான பாம்புகள் உள்ளன.

கடந்த சில நாட்களாக பாஸ்கர் நகர் பகுதியில் இரவு நேரங்களில் குடியிருப்புகளில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பாம்புகளைப் பிடிப்பதற்காக பொதுமக்கள் தீயணைப்புத் துறையின் உதவியை நாடுகின்றனர்.

இதுகுறித்து வனத் துறையினர் கூறும்போது, “பொதுவாக செப்டம்பர் மாதம் பாம்புகளின் இனப்பெருக்க காலம் என்பதால், பாதுகாப்பான இடங்களில் அவை முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கின்றன. ஒரே நேரத்தில் 30 பாம்புக் குட்டிகள் வரை முட்டைகளில் இருந்து வெளிவரும். கடந்த சில வாரங்களாக, பாம்புகளைப் பிடிக்கக்கோரி பொதுமக்களிடமிருந்து வனம் மற்றும் தீயணைப்புத்துறைக்கு அதிக அழைப்புகள் வருகின்றன.

பொதுவாக, காலி வீட்டுமனைகள், வீட்டின் சுற்றுப்புறம், வீட்டின் பின்புறம் உள்ள காலியிடங்களை முறையாகப் பராமரிப்பதில்லை. இதனால், புற்கள் வளர்ந்து, புதர்கள் மண்டிக் காணப்படுகின்றன. சில இடங்களில் குப்பை, பழைய சாமான்களை வீட்டுக்கு அருகிலேயே குவித்து வைத்துள்ளனர். இதனால், பாம்புகள் எண்ணிக்கை பெருகி, குடியிருப்புகளில் நுழைகின்றன. வீட்டின் உட்புறம் மட்டுமின்றி, சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பதே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு” என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories