40 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள்! ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற இளைஞர் கைது!

abin

ரூ.40 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்களை ஆஸ்திரேலியாவிற்கு அனுப்ப முயன்ற சென்னையை சேர்ந்த 30 வயது இளைஞரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்குப்பிரிவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு அனுப்புவதற்காக பார்சல்கள் வந்திருந்தன.

இந்த பார்சல்கள் மூலம் பெருமளவு போதை பவுடர் கடத்தப்பட இருப்பதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சரக்குப்பிரிவில் தீவிர சோதனையில் ஈடுபட்ட போது, ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்காக முதுகு வலிக்கான பெல்ட்கள், பெண்கள் உள்ளாடைகள், வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் கோப்பைகள் உள்ளிட்டவைகள் அடங்கிய 2 பார்சல்கள் இருந்தன.

இதைத்தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் பார்சல்களை பிரித்து பார்த்தனர். அப்போது இடுப்பு வலிக்கான பெல்ட், பெண்கள் உள்ளாடை பார்சல், கோப்பைகள் ஆகியவற்றில் ‘பெஸ்டோபெகிட்ரீன்’ என்ற விலைமதிப்புடைய போதை பவுடர்கள் கொண்ட பாக்கெட்டுகள் மறைத்து வைத்து கடத்த முயன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.

4 கிலோ எடை கொண்ட இவற்றின் மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து போதை பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் கூரியர் அலுவலகத்தில் போதை பொருட்களை அனுப்ப வந்த சென்னையை சேர்ந்த 30 வயது இளைஞரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories