பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜாவின் தந்தை காலமானார்

பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜாவின் தந்தை ஹரிஹர ஐயர் சனிக்கிழமை நேற்று இரவு 10.10 மணி அளவில் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 88.

1929ல் தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூரில் பிறந்தவர் ஹரிஹரன். சிறு வயதிலேயே தன்னை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைத்துக் கொண்டவர். 1948 ஆம் ஆண்டில், மஹாத்மா காந்தி கொலை வழக்கில் அவதூறுப் பிரசாரத்தால் அப்போதைய நேரு அரசு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தடை விதித்த போது, ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை விலக்கக் கோரி போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு கண்ணூர் சிறையில் ஜனா.கிருஷ்ணமூர்த்தி, மதுரை ராமசாமி ஆகியோருடன் அடைக்கப்பட்டார். தொடர்ந்து ஆறு மாதங்கள் சிறையில் வாழ்வைக் கழித்தார்.

மூத்த ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகரான ஹரிஹர ஐயர், யோகக் கலை மற்றும் சமஸ்கிருதத்தில் பாண்டித்யம் மிக்கவர்.
உடற்பயிற்சிக் கல்வியில் சிறந்து விளங்கினார். அதில் தங்கப்பதக்கம் பெற்றவர். உடற்பயிற்சிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவ 5 நூல்கள் எழுதியுள்ளார். வர்மம், பிஸியோதெரபி உள்ளிட்ட மருத்துவ சிகிச்சை முறைகளிலும் சிறந்து விளங்கியவர். பக்கவாத நோயாளிகளுக்கு உதவிபுரிந்துள்ளார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் சிறந்த கல்வியாளருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றவர்.

மறைந்த ஹரிஹர ஐயருக்கு ஹெச்.ராஜா உள்பட 5 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.
இவரது இறுதிச்சடங்கு ஞாயிறு இன்று மாலை 4 மணிக்கு காரைக்குடி சுப்பிரமணியபுரம் 9வது வீதியில் உள்ள அவர்களது இல்லத்தில் நடைபெறுகிறது.

தகவலுக்கு: N.சொக்கலிங்கம் பாஜக., மாவட்ட தலைவர் 9443112969

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories