அதிமுக., சார்பில் ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார் மதுசூதனன்!

சென்னை :
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் மதுசூதனன் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை இன்று காலை கூடிய அதிமுக.,வின் ஆட்சி மன்றக் குழு வெளியிட்டது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிச. 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. டிச.1ம் தேதிக்குள் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்க மும்முரம் காட்டின. திமுக., சார்பில் மருது கணேஷ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு களம் காண ஆயத்தமாகிவிட்டனர். இந்நிலையில் அதிமுக, சார்பில் யார் தேர்வு செய்யப் படுவர் என்பது குறித்து இழுபறி நீடித்தது.

இதில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் சார்பில், கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் போட்டியிட விரும்பினார். அவருக்கு பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆதரவு அளித்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் தங்களுக்கு வாய்ப்பு கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதன் காரணமாக முதன்முறையாக இடைத்தேர்தலுக்கு என்று கட்சியினரிடம் இருந்து விருப்ப மனு பெறப்பட்டது. போட்டியிட விருப்பம் தெரிவித்து மொத்தம் 28 பேர் மனு கொடுத்தனர். மதுசூதனனுக்கு எதிராக சில அமைச்சர்களே தங்கள் ஆதரவாளர்களை விருப்ப மனு கொடுக்க வைத்தனராம்.

இந்நிலையில் வியாழக்கிழமை இன்று காலை, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆட்சிமன்றக் குழு கூடியது. இக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜூ, சரோஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வெகு நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளராக மதுசூதனனையே மீண்டும் போட்டியிட வைப்பதாக முடிவு செய்யப்பட்டது. இதை அடுத்து மதுசூதனன் ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories