சபரிமலைக்குச் செல்லும் கம்பம் வழி ஒருவழிப் பாதையாக மாற்றம்

தேனி :

சபரிமலைக்குச் செல்வதற்கு பக்தர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது, கம்பம் குமுளி வழியான பெருவழிப் பாதைன் மற்றும், செங்கோட்டை புனலூர் வழியிலான பம்பை பாதை.

தற்போது, சபரி மலை சீசன் தொடங்கிவிட்டதால், மண்டல பூஜைக்குச் செல்லும் பக்தர்கள் அதிக அளவில், கம்பம் வழியே செல்லும் பாதையை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, தனிப்பட்ட வாகனங்கள், சுற்றுலா வேன்கள், கார்களில் அதிகம் வருவதால், கம்பம் வழிப் பாதையில் பெரும் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் பெருமளவில் கம்பம் பாதையில் வரிசை கட்டி நிற்கின்றன.

கம்பம் மலைப்பாதையில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் விதமாக, அந்தப் பாதையை ஒருவழிப் பாதையாக மாற்ற போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் வாகனங்கள் தடையின்றிச் செல்லும் என்பதுடன், பாதுகாப்பான மலைப் பயணத்தை உறுதி செய்வதாகவும் அமையும் என்பதால், தேனி மாவட்ட காவல் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, கம்பம் வழியாக சபரிமலை செல்லும் பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் கம்பமெட்டு, நெடுங்கண்டம் பாதையை பயன்படுத்தலாம். இதே போன்று சபரிமலையில் இருந்து திரும்ப வரும் பக்தர்கள் குமுளி பாதையை பயன்படுத்த வேண்டும் என தேனி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories