ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் குடும்பத்திற்கு ஆணையர் விஸ்வநாதன் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட சென்னை மதுரவாயல் சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டி குடும்பத்தினருக்கு ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் ஆறுதல் கூறினார். ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது பெரியபாண்டி சுட்டுக் கொல்லப்பட்டார்.
”பெரியபாண்டியனை சுட்டுக்கொன்ற கொள்ளையர்கள் தமிழக போலீசிடமிருந்து தப்பிக்க முடியாது” – சென்னை மேற்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் சந்தோஷ்குமார் உறுதி.
தமிழக போலீஸ் மீதான தாக்குதல் குறித்து ராம்புரா காவல் நிலையத்தில் சென்னை போலீசார் புகார் அளித்தனர்
ஜோத்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள பெரியபாண்டியன் உடலை விமானம் மூலம் சென்னை கொண்டுவர காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.
தமிழக போலீசார் சம்பவம் நடந்த ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்திற்கு பிற்பகல் செல்கின்றனர்.
ஜோத்பூரில் இருந்து பாலி மாவட்டத்திற்கு சாலை மார்க்கமாக செல்ல 5 மணி நேரம் ஆகும்.
சில வாரங்களுக்கு முன்பு ராம்புரா சென்ற தமிழக போலீசார் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் திரும்பினர்.