தமிழகத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோயில் நகரமான திருவண்ணாமலையில் பக்தர்கள் பலர் வந்து செல்வர் என்பதாலும், இப்போது மார்கழி மாதம் திருவெம்பாவை வழிபாடு நடப்பதாலும் பேருந்துகளை இயக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டது.
இதை அடுத்டு, திருவண்ணாமலையில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தையும் மீறி 75 சதவிகித அரசுப்பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் மக்கள் படும் சிரமம் ஓரளவு குறைந்துள்ளது.