ஊரை விட்டு ஓடுவேன் என்றவரா போராளி? அக்சராஹாசன் ட்விட்க்கு நெட்டிசன்ஸ்!

kamal - 2026

எனது அப்பா ஒரு போராளி என மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனை அவரது மகள் அக்சராஹாசன் புகழ்ந்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

ஆனால், தேர்தல் பிரசாரத்தின்போது, மைக் சிறிது நேரம் வேலை செய்யாததற்கே, தனது கட்சி சின்னமான டார்ச் லைட்டை தூக்கி வீசி உடைத்த கோபக்காரரான கமல்ஹாசன் எப்படி போராளியாக இருக்க முடியும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார் . அவருடன் உதவிக்கு அவரது இளையமகள் அக்சராஹாசனும் சென்று வருகிறார். அக்சராஹாசன் பதிவிட்டுள்ள டிவிட் மூலம் தெரிய வந்துள்ளது.

akshara - 2026

அவரது டிவிட்டில் ‘எனது அப்பா ஒரு போராளி என்றும் போராட்டத்தின் முடிவு வரை ஏற்படக்கூடிய வலிகளை தாங்கிக் கொள்வார்; என்றும் கூறி அதனுடன் கமல்ஹாசனுடன் இருக்கும் இரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை அவரது கட்சியினர் வைரலாக்கி வருகின்றனர்.

ஆனால், கமல்ஹாசனின் அரசியல் நடவடிக்கைகள் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன. தேர்தல் பிரசாரத்தின்போது, சினிமா வசனம் போல பேசி வருபவர் நிஜவாழ்க்கையில் ஒரு போராளிக்கு உரிய தகுதியோ, ஒரு தலைவனுக்கான தகுதியோ இல்லாதவராகவே இருக்கிறார்.

கமல்ஹாசன் சினிமாவில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில், வேறுவழியின்றி, அரசியலுக்கு வந்து, மக்களுக்கு நல்லது செய்யப் போவதாக கூறி வருகிறார். அவருக்கு ஆதரவாக மற்றொரு நடிகர் சரத்குமாரும், ஊடக அதிபர் பாரிவேந்தரும் கூட்டணி அமைத்துக்கொண்டு, ஆட்சியை கைப்பற்றிவிடப் போவதுபோல் அலப்பறை செய்து வருகின்றனர்.

தேர்தல் பிரசாரத்திற்காக காரில் பயணம் செய்யவே கஷ்டப்பபட்டுக்கொண்டு, கோடிக்கணக்கில் பணம் செலவழித்து, தனி ஹெலிகாப்டர் மூலம் சொகுசாக சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் கமல்ஹாசன் , அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்காக எப்படி பணியாற்றுவார் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றன.

சமீபத்தில், கோவையில், பிரசாரத்தின்போது, மைக் வேலை செய்யவில்லை என்றதும், தனது கையில் இருந்த டார்ச் லைட் சின்னத்தை தூக்கி வீசி தனது கோபத்தை பொதுமக்கள் மத்தியில் வெளிப்படுத்தியதுடன், அங்கிருந்து பேசாமல் சென்ற ஒரு நபர், எப்படி ஒரு போராளியாக இருக்க முடியும், அவர் எதற்காக போராடினார்,

தமிழர்களின் உரிமைக்காக என்று குரல் கொடுத்தார், தனது படம் வெளியிட முடியவில்லை என்று, ஊரைவிட்டு ஓடப்போவதாக ஒப்பாரி வைத்தவர்தானே கமல்ஹாசன், அவரை போராளி என்று அவரது மகள் அக்சராஹாசன் எப்படி கூறமுடியும் என சமுக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories