சேலம் அருகே பஸ்-ஷேர் ஆட்டோ மோதல்: 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

Published:

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, ஷேர் ஆட்டோ மீது தனியார் பஸ் மோதியதில், ஷேர் ஆட்டோவில் சென்ற 3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சேலத்தில் இருந்து திருவண்ணாமலை – பேளூர் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று, சந்திரப்பிள்ளைவலசு என்ற கிராமம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த ஷேர் ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பேளூரில் இந்து நீர்முள்ளிக்குட்டைக்கு ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் பஸ் அந்தப் பகுதியில் அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்துதான் காரணம் என்று கருதப் படும் நிலையில், இதனால் ஆத்திரமடைந்த நீர்முள்ளிக்குட்டை மக்கள் தனியார் பஸ்ஸை அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related articles

Recent articles

spot_img