February 21, 2026, 7:50 PM
29 C
Chennai

ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாத தொடர்பில் முகமது இக்பால்.. என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை! சிக்கிய 16 ஆவணங்கள்!

nia
nia

ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட புகாரில் கைது செய்யப்பட்ட மதுரை இளைஞர் செந்தில்குமார் என்ற முகமது இக்பால் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று 7 மணிநேரம் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பென் டிரைவ், சிம் கார்டு உள்ளிட்ட 16 ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் இக்பாலுடன் தொடர்பில் இருந்த திருப்பூர் இளைஞரிடமும் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் 8 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

kajimar st
kajimar st

மதுரை காஜிமார் தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்ற முகமது இக்பால் கடந்த ஆண்டு தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், தூங்கா விழிகள் ரெண்டு காஜிமார் தெருவில்.. என பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தொடர்பாக போலீசாருக்கு புகார் தெரிவிக்கபட்டது.

இந்த பதிவை வெளியிட்ட இக்பாலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.-க்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து இக்பாலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் மதுரையில் காஜிமார் தெரு, கே. புதூர், பெத்தானியாபுரம், மகபூப்பாளையம் ஆகிய பகுதிகளில் கேரளாவில் இருந்து வந்திருந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தினர்.

kajimar st 1
kajimar st 1

இக்பால் மற்றும் அவரது நண்பர்கள் வீட்டில் நடந்த இந்த சோதனை பிற்கபல் 1 மணி வரை நீடித்தது. இந்த சோதனையின் போது பென் டிரைவ், சிம் கார்டுகள் உள்ளிட்ட 16 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும் வாட்ஸ் அப் குழு ஒன்றில் திருப்பூரை சேர்ந்த இளைஞருடன் அதிக நேரம் இக்பால் உரையாடி இருந்தார். இதனையடுத்து திருப்பூரை சேர்ந்த அந்த இளைஞரிடமும் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சுமார் 8 மணிநேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில் திருப்பூர் இளைஞர் விடுவிக்கப்பட்டார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories