December 5, 2025, 4:20 PM
27.9 C
Chennai

ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாத தொடர்பில் முகமது இக்பால்.. என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை! சிக்கிய 16 ஆவணங்கள்!

nia
nia

ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட புகாரில் கைது செய்யப்பட்ட மதுரை இளைஞர் செந்தில்குமார் என்ற முகமது இக்பால் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று 7 மணிநேரம் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பென் டிரைவ், சிம் கார்டு உள்ளிட்ட 16 ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் இக்பாலுடன் தொடர்பில் இருந்த திருப்பூர் இளைஞரிடமும் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் 8 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

kajimar st
kajimar st

மதுரை காஜிமார் தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்ற முகமது இக்பால் கடந்த ஆண்டு தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், தூங்கா விழிகள் ரெண்டு காஜிமார் தெருவில்.. என பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தொடர்பாக போலீசாருக்கு புகார் தெரிவிக்கபட்டது.

இந்த பதிவை வெளியிட்ட இக்பாலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.-க்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து இக்பாலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் மதுரையில் காஜிமார் தெரு, கே. புதூர், பெத்தானியாபுரம், மகபூப்பாளையம் ஆகிய பகுதிகளில் கேரளாவில் இருந்து வந்திருந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தினர்.

kajimar st 1
kajimar st 1

இக்பால் மற்றும் அவரது நண்பர்கள் வீட்டில் நடந்த இந்த சோதனை பிற்கபல் 1 மணி வரை நீடித்தது. இந்த சோதனையின் போது பென் டிரைவ், சிம் கார்டுகள் உள்ளிட்ட 16 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும் வாட்ஸ் அப் குழு ஒன்றில் திருப்பூரை சேர்ந்த இளைஞருடன் அதிக நேரம் இக்பால் உரையாடி இருந்தார். இதனையடுத்து திருப்பூரை சேர்ந்த அந்த இளைஞரிடமும் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சுமார் 8 மணிநேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில் திருப்பூர் இளைஞர் விடுவிக்கப்பட்டார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories