February 21, 2026, 8:04 AM
25.6 C
Chennai

கள்ளத்தனமாய் இந்தியாவிற்கு வந்து பாலியல் தொழில்! பங்களாதேஷ் பெண் கைது!

prathel - 2026

கோவையில் பாஸ்போர்ட் இல்லாமல் நுழைந்து விபச்சாரத்தில் ஈடுபட்ட பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த பெண்ணை மீட்ட சரவணம்பட்டி காவல் துறையினர் அவரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

அந்த பெண்ணின் குடியுரிமை ஆவணங்களை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் விபச்சாரம் நடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சரவணம்பட்டி போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வீட்டில் இருந்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த அஜித்மோன் , மஹான்ஷா என்ற இருவரும் இரு பெண்களும் இருந்தனர்.

இதனையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஒருவர் அஜித்மோனின் மனைவி என்பதும் மற்றொரு பெண் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவருடைய பங்களாதேஷ் நாட்டின் குடியுரிமை தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

பாஸ்போர்ட் எதுவும் இல்லாமல் பங்களாதேஷில் இருந்து கோவைக்குள் ஊடுருவி விபச்சாரத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனடியாக இது குறித்து குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த சரவணம்பட்டி போலீசார், மீட்கப்பட்ட பெண்களில் பங்களாதேஷ் நாட்டை பெண்ணை மட்டும் சென்னை அழைத்து சென்று புழல் சிறையில் அடைத்தனர்.

பங்களாதேஷ் நாட்டு பெண்ணின் குடியுரிமையை கைப்பற்றிய போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் பாஸ்போட் இல்லாமல் கொல்கத்தா, பெங்களுர் பகுதிகளில் தங்கியிருத்த அவர் தற்போது கோவை காந்திபுரத்தில் தங்கியிருந்து விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்நிலையில் பங்களாதேஷ் பெண்ணிற்கு அடைக்கலம் கொடுத்து வைத்து இருந்த கேரளமாநிலத்தை சேர்ந்த தம்பதி உட்பட 3 பேரிடம் கோவை சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories