
மூன்றாவது கணவருடன் தாய் வாழ்ந்து வருவதால் தாத்தா வீட்டில் வளர்ந்து வரும் இரண்டாவது கணவனுக்குப் பிறந்த 6 வயது சிறுமியை முதல் கணவருக்கு பிறந்த மகனும் தாத்தாவும், தாய்மாமனும் பாலியல் சித்திரவதை செய்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று பேரும் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த அந்த 37 வயது பெண் மூன்றாவது கணவருடன் தற்போது வாழ்ந்து வருகிறார். முதல் கணவருக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இரண்டாவது கணவருக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். இரண்டாவது கணவர் இறந்து விட்டார். 62 வயது தாத்தா தான் அந்த சிறுமியை வளர்ப்பு வந்துள்ளார்.
அந்தத் தாத்தா 6 வயது சிறுமி என்றும் பாராமல் பேத்தி என்றும் பாராமல் பாலியல் தொந்தரவு செய்து வந்திருக்கிறார்.
சிறுமியின் 16 வயது அண்ணனும் பாலியல் தொந்தரவு செய்து வந்திருக்கிறார். தாய் மாமனும் பாலியல் தொந்தரவு செய்து வந்திருக்கிறார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் தாய் மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் மூன்று பேரையும் கைது செய்ய மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் ரூபன் உத்தரவிட்டதையடுத்து மகளிர் போலீசார் சிறுமியின் தாத்தா, அண்ணன், தாய்மாமன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
16 வயது அண்ணன் செங்கல்பட்டில் உள்ள இளஞ்சிறார் கூர்நோக்கு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். தாய்மாமனும் தாத்தாவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.