February 21, 2026, 6:34 PM
29 C
Chennai

தாய் 3வது கணவருடன்.. 6 வயது மகளுக்கு தாத்தா, மாமா, அண்ணனால் பாலியல் தொல்லை!

vankodumai
vankodumai

மூன்றாவது கணவருடன் தாய் வாழ்ந்து வருவதால் தாத்தா வீட்டில் வளர்ந்து வரும் இரண்டாவது கணவனுக்குப் பிறந்த 6 வயது சிறுமியை முதல் கணவருக்கு பிறந்த மகனும் தாத்தாவும், தாய்மாமனும் பாலியல் சித்திரவதை செய்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று பேரும் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த அந்த 37 வயது பெண் மூன்றாவது கணவருடன் தற்போது வாழ்ந்து வருகிறார். முதல் கணவருக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இரண்டாவது கணவருக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். இரண்டாவது கணவர் இறந்து விட்டார். 62 வயது தாத்தா தான் அந்த சிறுமியை வளர்ப்பு வந்துள்ளார்.

அந்தத் தாத்தா 6 வயது சிறுமி என்றும் பாராமல் பேத்தி என்றும் பாராமல் பாலியல் தொந்தரவு செய்து வந்திருக்கிறார்.

சிறுமியின் 16 வயது அண்ணனும் பாலியல் தொந்தரவு செய்து வந்திருக்கிறார். தாய் மாமனும் பாலியல் தொந்தரவு செய்து வந்திருக்கிறார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் தாய் மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் மூன்று பேரையும் கைது செய்ய மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் ரூபன் உத்தரவிட்டதையடுத்து மகளிர் போலீசார் சிறுமியின் தாத்தா, அண்ணன், தாய்மாமன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

16 வயது அண்ணன் செங்கல்பட்டில் உள்ள இளஞ்சிறார் கூர்நோக்கு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். தாய்மாமனும் தாத்தாவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories