December 6, 2025, 7:53 AM
23.8 C
Chennai

குன்றத்தூரில் பெண்ணிடம் செயின் பறித்த இளைஞர் கைது; புதுவையில் தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்

சென்னை:

சென்னை குன்றத்தூரில் ஜெயஸ்ரீ என்பவரிடம் தங்கச் சங்கிலி பறித்த சிவா (19) என்பவர் கைது செய்யப் பட்டுள்ளார். சென்னை குன்றத்தூரில் 2 நாள்களுக்கு முன் கணவருடன் நடந்து சென்று கொண்டிருந்த ஜெயஸ்ரீயிடம், பின்னால் ஓடி வந்து நகை பறித்துக் கொண்டு ஓடிவிட்டார் சிவா. இவர், புதுச்சேரியில் தலைமறைவாக இருந்தார். இவரை சம்பவம் நடந்த இரண்டு நாட்களில் கைது செய்துள்ளது போலீஸ்.

சென்னையில் கடந்த சில நாட்களில் நடந்த இரண்டு செயின் பறிப்பு சம்பவங்கள், பொதுமக்களை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வண்ணாரபேட்டை மற்றும் குன்றத்தூரை சேர்ந்த இரண்டு பெண்களிடமும், பைக்கில் வந்த இளைஞர்கள் கழுத்துச் செயினை அறுத்துச் சென்றனர். அவர்களில் மேனகா என்ற பெண், செயினை காப்பாற்ற போராடி, திருடனிடம் இருண்டு விலக முயன்றபோது 100 அடி தூரத்திற்கு அந்த வழிப்பறிக் கொள்ளையனால் தரதரவென தரையில் விழுந்த நிலையில இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

bike chain snath - 2025

இப்போது மேனகா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பறிகொடுத்த சங்கிலி 15 சவரன். இப்படி ஒரே சங்கிலி அறுப்பில் கொள்ளையனாக மாறி ஒரு இளைஞன் நாலரை லட்சம் சேர்த்துவிட்டான் என்று பொருமித் தள்ளுகின்றனர் வலைத்தளங்களில்.

மாடர்ன் டிரெஸ், டாப் கிளாஸ் பைக், குடி, பெண்களோடு கும்மாளம்.. இதுபோன்ற விஷயங்களில் வெறியேறிப் போயிருக்கும் இளைஞர்களுக்கு, குறைந்த பட்சம் இரண்டே நிமிஷத்தில் சில லட்சத்தை தேற்ற ஒரே வழி, குடும்ப பெண்கள் கழுத்தில் கிடக்கும் தங்கச் சங்கிலிதான் என்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட கொடுமையில் இறங்கும் கொள்ளைக்கார இளைஞர்களை, பிடிப்பதில் காவல் துறை சுணக்கம் காட்டலாம். அப்படியே சிக்கினாலும் இதற்காகக் காத்திருக்கும் வக்கீல்கள் உடனே இவர்களை ஜாமினில் கொண்டு வந்து, ப்பூ, இவ்வளவுதான் என்றும் சொல்ல வைக்கலாம்..

இப்படியே போனால் என்னதான் நடக்கும்? இதுபோன்ற செயின் பறிப்பு சம்பவங்களை கேட்டு உள்ளுக்குள் குமுறும் பொதுமக்கள், குற்றவாளிகள் கையும் களவுமாக சிக்கும்போது ஊரே ஒன்றுகூடி அடித்தே கொல்லும் நிலை வரலாம்… என்று எச்சரிக்கை வாசகங்களை சமூக ஊடகங்களில் பலரும் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், குன்றத்தூர் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் சிவா என்ற இளைஞர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories