காதலர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், காதலின் சின்னமான ரோஜா மலர்களின் விலை அதிக அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு காதல் ஜோடிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. பிப்ரவரி 14ஆம் தேதி உலகளாவிய அளவில் பல நாடுகளில் கொண்டாடப்படும் காதலர் தினத்தில், காதலர்கள் திருமணம் செய்து கொள்வதும், காதலிக்க இருப்பவர்கள் தங்கள் காதலை தெரிவிப்பதும் வழக்கம். முன்பெல்லாம் ஒரு நாள் கொண்டாடப்பட்ட காதலர் தினம் தற்போது ஒரு வார காலம் கொண்டாடப்படுகிறது. ரோஜா தினம், காதலை சொல்லும் தினம், சாக்லேட் தினம், டெடி தினம், முத்த தினம், கட்டிப்பிடிக்கும் தினம், காதலர் தினம் என்று ஒரு வாரம் இந்த நிகழ்வு நீட்டித்துக் கொண்டுள்ளது…

