December 5, 2025, 5:40 PM
27.9 C
Chennai

குடுமிப்பிடி சண்டையை தவிர்க்க… ராகுல் காந்தி சிவகங்கையில் போட்டியிட விரும்பினாராம்.!

rahul gandhi 24 - 2025

திமுக., கூட்டணியில் சிவகங்கை தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப் பட்டதும், அங்கே யார் போட்டியிடுவார் என்று ஒரு கேள்வி எழுந்தது. தொகுதியில் நன்கு அறிமுகமான சுதர்ஸன நாச்சியப்பன் களத்தில் இருக்க, காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோரும் அதைக் கேட்க… முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமோ அதைத் தன் மகனுக்குக் கேட்டார்.

ஏற்கெனவே தோல்வியின் விளிம்புக்குச் சென்று, பின்னர் ரீகவுண்டிங்கில் வெற்றி பெற்று வந்த ப.சிதம்பரம், கடந்த முறை தனது மகன் கார்த்தி அந்தத் தொகுதியில் நின்று தோற்ற போதும், இந்த முறை திமுக., கூட்டணி தயவால் மகன் வென்று விடுவார் என்று உறுதியாக நம்பி தொகுதியைக் கேட்டு அடம்பித்தார்.

ஆனால் கார்த்தி மீதுள்ள வழக்குகள், எதிர்ப்புகள் இவற்றைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் மேலிடம், மறுத்துள்ளது. ஆனால், தனது மகனுக்கு சீட் கொடுக்கவில்லை என்றால், தாம் கட்சியில் இருந்து வெளியேறப் போவதாக மிரட்டி, காரியத்தை சாதித்துக் கொண்டுள்ளார் ப.சிதம்பரம்.

இந்தப் பிரச்னைகளால் அல்லாடிக் கொண்டிருந்த போது, ராகுல் காந்தி அமேதியை அடுத்து தென்னிந்தியாவில் இரண்டாவது தொகுதியாக சிவகங்கையில் நிற்கலாம் என்று பரிசீலனை செய்துள்ளார். காரணம், அடிதடியை தவிர்க்க வேண்டும் என்றால், தாம் அங்கே நிற்பதுதான் சரி என்று அவர் கருதியுள்ளார்.

இருப்பினும் கடைசியில் சிதம்பரத்தின் பிடிவாதமே வென்றது. இவ்வாறு சிவகங்கையில் ராகுல் போட்டியிட விரும்பினார் என்ற தகவலையும் ப.சிதம்பரமே வெளியில் இப்போது கூறியுள்ளார்.

சிவகங்கை தொகுதியில் ஏற்பட்ட வேட்பாளர் சர்ச்சை குறித்து நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பதிலில், ”அதில் சர்ச்சை எதுவும் இல்லை. முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான 24 மணி நேரத்தில் சிவகங்கை வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டது. ஏனெனில் வயநாடு, சிவகங்கை, கர்நாடகாவில் ஒரு தொகுதி ஆகிய மூன்று தொகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக இருந்தார். அதனால்தான் இந்தத் தாமதம்” என்று கூறியிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories