December 5, 2025, 4:20 PM
27.9 C
Chennai

மொழிப்போர் நிகழ்வுகளை மறந்துவிட முடியாது: ம.நடராசன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்

m k stalin dmk - 2025

சென்னை: திராவிட இயக்கத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார் ம.நடராசன். மொழிப்போர் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது என்று சென்னை பெசண்ட் நகர் இல்லத்தில் ம.நடராசன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வெளியில் வந்த திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசனுக்கு கடந்த அக்டோபர் மாதத்தில் பல்லுறுப்புகள் செயலிழந்து உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை அடுத்து அவர் சென்னையை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கே அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். கல்லீரல், சிறுநீரகம் இரண்டையும் அவருக்கு மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதை அடுத்து, தஞ்சையில் விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைந்த இளைஞரிடம் இருந்து கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை தானமாகப் பெறப்பட்டு, நடராஜனுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது.

இதன் பின்னர் உடல்நிலை தேறி வந்த நிலையில், சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்தார் நடராசன். அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று உடல்நிலையை பரிசோதித்து வந்தார். அவருக்கு சனிக்கிழமை இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட அவர் உடனே குளோபல் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப் பட்டார். அங்கே தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. செயற்கை சுவாசம் அளிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுநீரகங்கள் செயலிழந்தன. இதனால் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டது. இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நடராஜன் இன்று அதிகாலை சுமார் 1.30 மணி அளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்தது.

மறைந்த ம.நடராசன் உடலுக்கு பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

தலைவர்கள் பலர் இரங்கல் செய்தி வெளியிட்டனர். ம.நடராஜன் மறைவுக்கு, தி.க.தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், ஜவாஹிருல்லா, புகழேந்தி, வேல்முருகன், சுப.வீரபாண்டியன், இயக்குநர் பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories