மொழிப்போர் நிகழ்வுகளை மறந்துவிட முடியாது: ம.நடராசன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்

m k stalin dmk - 2026

சென்னை: திராவிட இயக்கத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார் ம.நடராசன். மொழிப்போர் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது என்று சென்னை பெசண்ட் நகர் இல்லத்தில் ம.நடராசன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வெளியில் வந்த திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசனுக்கு கடந்த அக்டோபர் மாதத்தில் பல்லுறுப்புகள் செயலிழந்து உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை அடுத்து அவர் சென்னையை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கே அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். கல்லீரல், சிறுநீரகம் இரண்டையும் அவருக்கு மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதை அடுத்து, தஞ்சையில் விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைந்த இளைஞரிடம் இருந்து கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை தானமாகப் பெறப்பட்டு, நடராஜனுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது.

இதன் பின்னர் உடல்நிலை தேறி வந்த நிலையில், சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்தார் நடராசன். அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று உடல்நிலையை பரிசோதித்து வந்தார். அவருக்கு சனிக்கிழமை இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட அவர் உடனே குளோபல் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப் பட்டார். அங்கே தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. செயற்கை சுவாசம் அளிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுநீரகங்கள் செயலிழந்தன. இதனால் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டது. இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நடராஜன் இன்று அதிகாலை சுமார் 1.30 மணி அளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்தது.

மறைந்த ம.நடராசன் உடலுக்கு பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

தலைவர்கள் பலர் இரங்கல் செய்தி வெளியிட்டனர். ம.நடராஜன் மறைவுக்கு, தி.க.தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், ஜவாஹிருல்லா, புகழேந்தி, வேல்முருகன், சுப.வீரபாண்டியன், இயக்குநர் பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories