யாரும் தீக்குளிப்பில் ஈடுபட வேண்டாம்: அன்புமணி உருக்கமான வேண்டுகோள்!

anbu mani 1 - 2026
காவிரி உரிமையை போராடி மீட்போம் என்றும், அதற்காக யாரும் தீக்குளிப்பில் ஈடுபட வேண்டாம் என்றும் பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், பிரதமர் நரேந்திரமோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீக்குளித்த ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் என்ற இளைஞர் மருத்துவம் பயனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்  உறவினர்களுக்கும் பா.ம.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு மத்திய அரசு இழைத்த துரோகத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. காவிரி மற்றும் நிட்யூட்ரினோ விவகாரத்தில் ஏற்கனவே இரு இளைஞர்கள் தங்களின் உயிர்களை தீக்கு இரையாய் கொடுத்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தில் பா.ம.க. சார்பில் நேற்று நடைபெற்ற போராட்டங்களின் போது திண்டிவனத்தில் மின்சாரம் தாக்கி ரஞ்சித் என்ற என் தம்பி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளான். இத்துயரங்கள் போதாது என்று இப்போது தர்மலிங்கம் தீக்குளித்து இறந்த செய்தி மனதை வாட்டுகிறது. இனியும் இத்தகைய துயரங்களில் எவரும் ஈடுபடக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.
காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டிருப்பது உண்மை தான். அதற்கு எதிராக கடுமையாகப் போராடித் தான் காவிரி உரிமைகளை மீட்டெடுக்க வேண்டுமே தவிர, தீக்குளிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுவது முறையல்ல. இத்தகைய செயல்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், சமுதாயத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பைம் ஏற்படுத்துமே தவிர, எந்தவிதமான உரிமைகளையும் பெற்றுத் தராது. எனவே, காவிரியில் நமது உரிமைகளை வென்றெடுக்க தொடர்ந்து போராட வேண்டும். மாறாக யாரும் தீக்குளிப்பு போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories