தமிழர்களுக்கு பிரதமர் மோடி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து!

modi at adyar cancer institute - 2026

சென்னை : சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மைய வைரவிழாக் கட்டடத்தைத் திறந்து வைத்துப் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் பேசுகையில், தமிழர்களுக்கு நெஞ்சம் நிறைந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறி தனது பேச்சைத் தொடங்கினார்.

சென்னை கிண்டியில் உள்ள அடையாறு புற்றுநோய் சிகிச்சை மைய வைரவிழா கட்டிடம், செவிலியர்களுக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட நான்கு புதிய கட்டிடங்களை பிரதமர் திறந்துவைத்தார். அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் சாந்தா, பிரதமர் நரேந்திர மோடிக்கு திருக்குறள் புத்தகத்தை பரிசளித்தார். நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து தமிழர்களுக்கும், இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறித் தனது பேச்சைத் தொடங்கிய மோடி, தேசிய சுகாதாரத் திட்டத்தில் நோய்களை வரும் முன் காக்கும் பணி நடந்து வருகிறது என்றும், 10 கோடி குடும்பங்கள் பயனடையும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் அளவுக்கு தேசிய சுகாதார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு அருகிலேயே நோய் தடுப்பு வசதிகளை வழங்குவதே அரசின் கொள்கை. 14 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

டாக்டர் சாந்தா விடுத்த கோரிக்கைகளை பரிந்துரை செய்யும்படி தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். அரசின் நிதியுதவில் செயல்படும் உலகின் பெரிய காப்பீட்டுத் திட்டம் துவங்கப்பட உள்ளது. நமது சுதந்திரப் போராட்ட தியாகிகள் பெருமை கொள்ளும் வகையில் புதிய இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்று கூறிய மோடி, 15ஆவது நிதி ஆணையத்தின் மூலம்,மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படும் என அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள் பரப்படுவதாக வேதனை தெரிவித்தார்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு அரசின் மருத்துவ மையங்கள் மூலம், கடந்த 6 வருடங்களில், ஒரு கோடியே 71 லட்சம் பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனையும், 2 கோடியே 10 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனையும் நடைபெற்றிருப்பதாக கூறினார்.

விழாவில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories