தமிழர்களுக்கு பிரதமர் மோடி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து!

modi at adyar cancer institute - 2026

சென்னை : சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மைய வைரவிழாக் கட்டடத்தைத் திறந்து வைத்துப் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் பேசுகையில், தமிழர்களுக்கு நெஞ்சம் நிறைந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறி தனது பேச்சைத் தொடங்கினார்.

சென்னை கிண்டியில் உள்ள அடையாறு புற்றுநோய் சிகிச்சை மைய வைரவிழா கட்டிடம், செவிலியர்களுக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட நான்கு புதிய கட்டிடங்களை பிரதமர் திறந்துவைத்தார். அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் சாந்தா, பிரதமர் நரேந்திர மோடிக்கு திருக்குறள் புத்தகத்தை பரிசளித்தார். நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து தமிழர்களுக்கும், இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறித் தனது பேச்சைத் தொடங்கிய மோடி, தேசிய சுகாதாரத் திட்டத்தில் நோய்களை வரும் முன் காக்கும் பணி நடந்து வருகிறது என்றும், 10 கோடி குடும்பங்கள் பயனடையும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் அளவுக்கு தேசிய சுகாதார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு அருகிலேயே நோய் தடுப்பு வசதிகளை வழங்குவதே அரசின் கொள்கை. 14 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

டாக்டர் சாந்தா விடுத்த கோரிக்கைகளை பரிந்துரை செய்யும்படி தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். அரசின் நிதியுதவில் செயல்படும் உலகின் பெரிய காப்பீட்டுத் திட்டம் துவங்கப்பட உள்ளது. நமது சுதந்திரப் போராட்ட தியாகிகள் பெருமை கொள்ளும் வகையில் புதிய இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்று கூறிய மோடி, 15ஆவது நிதி ஆணையத்தின் மூலம்,மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படும் என அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள் பரப்படுவதாக வேதனை தெரிவித்தார்.

விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு அரசின் மருத்துவ மையங்கள் மூலம், கடந்த 6 வருடங்களில், ஒரு கோடியே 71 லட்சம் பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனையும், 2 கோடியே 10 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனையும் நடைபெற்றிருப்பதாக கூறினார்.

விழாவில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories