December 6, 2025, 12:59 AM
26 C
Chennai

மோடியைக் கொல்ல வேண்டும் என பேச்சு: மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது செங்கல்பட்டு நீதிமன்றம்!

mansur ali - 2025

செங்கல்பட்டு: தேச விரோத பிரிவினைவாதக் கருத்துகளை ஊடகங்களில் பேசி, பிரதமர் மோடியைக் கொல்ல வேண்டும் என்ற வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.

முன்னதாக, இதே போன்ற விதங்களில் பேசியும் போராட்டம் என்ற வகையில் பொதுவுடைமைக்கு சேதம் ஏற்படுத்தி, மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்ட சீமான், பாரதிராஜா உள்ளிட்டோரை பார்க்க அனுமதிக்காத போலீசாரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தார் மன்சூர் அலிகான். அப்போது அவர் கைது செய்யப்பட்டார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த போது, கடந்த ஏப்.12 ஆம் தேதி சென்னையில் நடந்த ராணுவ தளவாட பொருட்கள் கண்காட்சியில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகள் சென்னை விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது கருப்புக் கொடி ஏந்தியும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டங்களில் பாரதிராஜா, சீமான், அமீிர், கௌதமன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப் பட்டிருந்தனர்.

இதனிடையே அண்ணா சாலையில் காட்டுமிராண்டித் தனமாக, கிரிக்கெட் பார்க்க வந்த அப்பாவி ரசிகர்கள் மீதும் போலீஸார் மீதும் குண்டர் படையை ஏவி விட்டு தாக்குதல் நடத்திய நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்ட 10 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மோடி சென்ற பின்னர் சீமானைக் கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாகவும், எனவே தான் பாரதிராஜா உள்ளிட்டோர் விடுவிக்கப்படவில்லை என்றும் செய்தி பரவியது. இதை அடுத்து பல்லாவரம் திருமண மண்டபத்துக்கு சென்ற மன்சூர் அலிகான், அங்கே சீமான் உள்ளிட்டோரைப் பார்க்க வேண்டும் என்றார். ஆனால், அவருக்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து தன்னையும் கைது செய்யுமாறு அவர் ஆர்ப்பாட்டம் நடத்தினார். மேலும், அவர் பேசிய தேச விரோத, அபாயகரமான பேச்சுகள் வலைதளங்களில் வைரலாகப் பரவின. இந்த நிலையில் அவரும் கைது செய்யப்பட்டார்.

எனினும் சீமான், பாரதிராஜா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டும் மன்சூர் அலிகான் மட்டும் விடுவிக்கப்படவில்லை. இதையடுத்து கடந்த சனிக்கிழமை சென்னை ஆணையர் அலுவலகத்துக்கு வந்த சிம்பு அங்கு ஆணையரை சந்தித்து மன்சூர் அலிகானை கைது செய்தது ஏன் என்று கேட்டார். மேலும் அவரை விடுவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில், மன்சூர் அலிகான் ஜாமீன் கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை செங்கல்பட்டு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கூறி, மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories