யாராவது கண்ணுல பட்டா பிடிச்சி உள்ள வைங்க… அரசு ஊழியர் போராட்டக் களம்!

jagto geo - 2026

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோட்டையை நோக்கி பேரணி செல்ல வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து வருகின்றனர். கைது செய்யப் பட்டவர்கள், அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். பெண்களை இன்று மதியத்துக்கு மேல் விடுவிப்பதாகக் கூறியுள்ள போலீஸார் அவர்களுக்கு காலையில் டீயும் பன்னும் கொடுத்து மண்டபங்களில் தங்க வைத்துள்ளதாக ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் கூறினர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்; வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்குதல்; 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 7 ஆவது ஊதியக்குழுவின் முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மெரினாவில் சென்னை பல்கலைக்கழகம் அருகே ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். சென்னை வாலாஜா சாலையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சென்னை அருகே வண்டலூரில் வாகன் சோதனையின்போது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்யப் பட்டனர்.  அண்ணாசாலை, சேப்பாக்கம், கடற்கரை சாலைகளில் 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோட்டையை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. கோட்டை நோக்கி வரும் சாலைகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சாலைகளில் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பிறகே கோட்டையை நோக்கி செல்லும் மெரினா சாலை, ராஜாஜி சாலைகளில் அனுமதிக்கப்பட்டன.

கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்துக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரை கைது செய்வதற்காக, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாலை முதல் ரயில்கள் மூலம் வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அடையாளம் கண்டு கைது செய்த போலீசார், சந்தேகத்திற்கு இடமான முறையில் குழுவாக வந்தவர்களின் அடையாள அட்டையை வாங்கியும் சோதனை மேற்கொண்டனர். அவ்வாறு வந்தவர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டால், அவர்களை உடனடியாகக் கைது செய்த போலீசார், அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.

தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் 100க்கும் மேற்பட்ட போலீசார், தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையை நோக்கி தனியார் வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகளை தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories