நடிகர் விஷாலின் சகோதரர் மர்ம மரணம்; இரும்புத்திரை வெளியாகும் முன் சோகம்!

vishal i will continue to - 2026

தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் கோபால் ரெட்டியின் மகன் பார்கவ் ரெட்டி (வயது 47) தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் நடிகர் விஷாலின் சகோதரர் முறை உறவினர்.

சென்னையில் வசித்து வந்தார் பார்கவ் ரெட்டி. இவர் பார்கவ் ஆர்ட் ப்ரொடக்‌ஷன் நிறுவன அதிபர். சன்னாரெட்டி பார்கவ் ரெட்டி என்று அறியப்பட்ட இவர், திங்கள்கிழமை நேற்று தனது கோழிப்பண்ணை பணியாளருடன் பேசுவதற்காக வாகாடு மண்டலில் உள்ள பம்பாலி கடற்கரைப் பகுதிக்கு வந்துள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இன்று காலை அவரது சடலம் கடற்கரைப் பகுதியில் கிடந்துள்ளது.

அவரது மரணத்துக்குக் காரணம் என்ன என்பது தெரியவில்லை என்று போலீஸார் கூறியுள்ளனர். இந்த மர்ம மரணம் குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர் போலீஸார்.

bhargavReddy - 2026
தெலுகு திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.கோபால் ரெட்டியின் மகன் பார்கவ் ரெட்டி

எஸ். கோபால ரெட்டி, 80களில் பல ஹிட் படங்களை தயாரித்தவர். என்.பாலகிருஷ்ணாவுடன் இணைந்து பல படங்களைத் தயாரித்தவர். கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் ஹிட் ஆன படங்கள் பல. மகன் பார்கவ் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல படங்களைத் தாரித்திருந்தாலும், கடந்த 2008ல் கோபால ரெட்டி காலமான பின்னர், இந் நிறுவனம் படங்கள் எதையும் தயாரிக்கவில்லை.

இந்நிலையில், நடிகர் விஷால் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை ‘இருப்புத்திரை’ ரிலீஸாகிறது. இன்று மர்மமான முறையில் உயிரிழந்த பார்கவ் ரெட்டி, நடிகர் விஷாலின் சகோதரர் முறையினர். இதனால், விஷாலின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பார்கவ் ரெட்டி மரணம் குறித்து விஷால் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில் ‘ பார்கவ், உன் வாழ்வு அதற்குள் முடிந்து விட்டதா. இருக்கவே முடியாது. நான் என் சொந்த சகோதரனை இழந்து விட்டேன். என்னால் இந்த இழப்பை ஈடு செய்யவே முடியாது. உன்னை தொலைத்து விட்டேன். நான் குழப்பத்தில் இருக்கிறேன். நீ ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தாய். உனக்கு என்ன பிரச்னை இருந்தாலும் என்னிடம் கூறியிருக்கலாமே. அதை தீர்த்திருப்போமே. நான் அழுது கொண்டிருக்கிறேன்… என்று டிவிட்டர் பதிவில் ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார்.

 

பார்கவ் ரெட்டியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விஷால் அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories