நெல்லை மாவட்ட மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை அறிவுரை

nellai district police office - 2026

நெல்லை மாவட்ட மாணவர்களுக்கு காவல்துறை அன்பான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பு…

காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு அன்பான வேண்டுகோள் …

திருநெல்வேலி மாநகரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஜாதி மோதல்கள், அனுமதி பெறாத ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் மற்றும் வீண் சண்டை சச்சரவுகளில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.

இதில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் தனியார் மற்றும் அரசு  நிறுவனங்களில் பணிபுரிய வேலைவாய்ப்பு கிடைத்தும், மேற்படி அவர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர்களால் வேலைக்கு செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இதை கவனத்தில் கொண்டு மாணவர்கள் தங்களுடைய வருங்கால நல்வாழ்க்கையினை மனதில் கொண்டு ஒழுக்கத்துடனும்,

சாதி மோதல்கள் மற்றும் வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமலும், உரிய அனுமதி பெறாத ஆர்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் பங்கு பெறுவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.

சட்டத்திற்கு புறம்பாக எவ்வித செயல்களில் ஈடுபடாமல், அரசு அதிகாரிகள் மேற்கொள்ளும் சட்டரீதியான செயல்களுக்கு இடையூறு செய்யாமலும் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த அறிவுரைகளை பெற்றோர்கள், கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள்  மற்றும் ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுக்கு எடுத்துக்கூறி  விளைவுகள் குறித்தும் அவ்வப்போது அறிவுறுத்துவதோடு சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இது சம்பந்தமான தகவல்களை தெரிவிக்க வேண்டும் என மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு காவல்துறை சார்பில் காவல் சரக துணைத் தலைவர் கபில் குமார் சரட்கர் அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எதிர்கால இந்தியா இளைஞர் கையில், மாணவர்கள் செய்யும் சிறு தவறு அவர்கள் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி விடக் கூடாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories