February 21, 2026, 1:12 PM
29.5 C
Chennai

நெல்லை மாவட்ட மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை அறிவுரை

nellai district police office - 2026

நெல்லை மாவட்ட மாணவர்களுக்கு காவல்துறை அன்பான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பு…

காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு அன்பான வேண்டுகோள் …

திருநெல்வேலி மாநகரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஜாதி மோதல்கள், அனுமதி பெறாத ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் மற்றும் வீண் சண்டை சச்சரவுகளில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.

இதில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் தனியார் மற்றும் அரசு  நிறுவனங்களில் பணிபுரிய வேலைவாய்ப்பு கிடைத்தும், மேற்படி அவர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர்களால் வேலைக்கு செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இதை கவனத்தில் கொண்டு மாணவர்கள் தங்களுடைய வருங்கால நல்வாழ்க்கையினை மனதில் கொண்டு ஒழுக்கத்துடனும்,

சாதி மோதல்கள் மற்றும் வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமலும், உரிய அனுமதி பெறாத ஆர்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் பங்கு பெறுவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.

சட்டத்திற்கு புறம்பாக எவ்வித செயல்களில் ஈடுபடாமல், அரசு அதிகாரிகள் மேற்கொள்ளும் சட்டரீதியான செயல்களுக்கு இடையூறு செய்யாமலும் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த அறிவுரைகளை பெற்றோர்கள், கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள்  மற்றும் ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுக்கு எடுத்துக்கூறி  விளைவுகள் குறித்தும் அவ்வப்போது அறிவுறுத்துவதோடு சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இது சம்பந்தமான தகவல்களை தெரிவிக்க வேண்டும் என மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு காவல்துறை சார்பில் காவல் சரக துணைத் தலைவர் கபில் குமார் சரட்கர் அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எதிர்கால இந்தியா இளைஞர் கையில், மாணவர்கள் செய்யும் சிறு தவறு அவர்கள் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி விடக் கூடாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories