எடியூரப்பாவுக்கு 15 நாள் அவகாசம் கொடுத்த ஆளுநர் செயல் கேலிக்கூத்து: ரஜினி காந்த்

rajini speech - 2026

நடிகர் ரஜினி காந்த் தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், இளைஞர்களுடன் அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்நிலையில் இன்று, ரஜினி மக்கள் மன்ற மகளிர் பிரிவினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் மகிழ்ச்சியுடன் தகவல் பகிர்ந்த ரஜினிகாந்த், உணர்வுப்பூர்வமான சந்திப்பு, மிகவும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைக் கூட்டமாக இருந்தது என்று பதிவிட்டிருந்தார்.


கடந்த டிசம்பரில்  அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த ரஜினிகாந்த், தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகளை சந்தித்தார். இன்று, தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த மகளிர் அணி நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த நிகழ்வின் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த். அப்போது செய்தியாளர்கள் கர்நாடகா விவகாரம், காவிரி நீர்ப்பிரச்னை, கமல் அனைத்துக் கட்சிக் கூட்டம் என சில கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்கு பதிலளித்தார் ரஜினிகாந்த்.

அப்போது அவர்,  காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும் என்றும், அணைகளின் கட்டுப்பாடு காவிரி மேலாண்மை ஆணையத்திடமே இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும்,  பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்த நாடுகள் வளர்ச்சி கண்டிருக்கின்றன. எங்கள் கட்சியிலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து, ஒரு நாளிதழில்,  ரஜினிகாந்தின் கட்சி 150 தொகுதிகளை ஆக்கிரமிக்கும் என்று வெளியான செய்தி குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர்,  அவ்வாறு நடந்தால் மகிழ்ச்சி என்றார்.

கர்நாடக அரசியல் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த்,  அங்கே ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது என்றார்.  எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாள் அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து என்றும் குறிப்பிட்டார். காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவாக எல்லாம் குறிப்பிட்டுள்ளது என்றும், மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் அணைகள் திறப்பு உள்ளிட்டவை இருக்க வேண்டும்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை புதிதாக பொறுப்பேற்கும் கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

மெரினா நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு போலீஸார் தடை விதித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், காரணமில்லாமல் போலீசார் தடை விதிக்க மாட்டார்கள் என்றார்.

நடிகர் கமலஹாசன் காவிரிக்காகக் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து கமல்ஹாசனே கருத்து தெரிவித்திருப்பது குறித்து கேட்டபோது, இன்னும் நான் கட்சியே தொடங்கவில்லையே, அதற்குள் எப்படி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும் என்று கேட்டார்.

மேலும், நிச்சயமாக தாம் முன்னறே கூறியபடி, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சி தொடங்கப்படும் என்றும், அதற்காக எப்போதும் தாம் தயாராக இருப்பதாகவும் கூறினார் நடிகர் ரஜினிகாந்த்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories