December 5, 2025, 1:47 PM
26.9 C
Chennai

எடியூரப்பாவுக்கு 15 நாள் அவகாசம் கொடுத்த ஆளுநர் செயல் கேலிக்கூத்து: ரஜினி காந்த்

rajini speech - 2025

நடிகர் ரஜினி காந்த் தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், இளைஞர்களுடன் அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்நிலையில் இன்று, ரஜினி மக்கள் மன்ற மகளிர் பிரிவினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் மகிழ்ச்சியுடன் தகவல் பகிர்ந்த ரஜினிகாந்த், உணர்வுப்பூர்வமான சந்திப்பு, மிகவும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைக் கூட்டமாக இருந்தது என்று பதிவிட்டிருந்தார்.


கடந்த டிசம்பரில்  அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த ரஜினிகாந்த், தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகளை சந்தித்தார். இன்று, தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த மகளிர் அணி நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த நிகழ்வின் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த். அப்போது செய்தியாளர்கள் கர்நாடகா விவகாரம், காவிரி நீர்ப்பிரச்னை, கமல் அனைத்துக் கட்சிக் கூட்டம் என சில கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்கு பதிலளித்தார் ரஜினிகாந்த்.

அப்போது அவர்,  காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும் என்றும், அணைகளின் கட்டுப்பாடு காவிரி மேலாண்மை ஆணையத்திடமே இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும்,  பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்த நாடுகள் வளர்ச்சி கண்டிருக்கின்றன. எங்கள் கட்சியிலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து, ஒரு நாளிதழில்,  ரஜினிகாந்தின் கட்சி 150 தொகுதிகளை ஆக்கிரமிக்கும் என்று வெளியான செய்தி குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர்,  அவ்வாறு நடந்தால் மகிழ்ச்சி என்றார்.

கர்நாடக அரசியல் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த்,  அங்கே ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது என்றார்.  எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாள் அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து என்றும் குறிப்பிட்டார். காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவாக எல்லாம் குறிப்பிட்டுள்ளது என்றும், மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் அணைகள் திறப்பு உள்ளிட்டவை இருக்க வேண்டும்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை புதிதாக பொறுப்பேற்கும் கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

மெரினா நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு போலீஸார் தடை விதித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், காரணமில்லாமல் போலீசார் தடை விதிக்க மாட்டார்கள் என்றார்.

நடிகர் கமலஹாசன் காவிரிக்காகக் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து கமல்ஹாசனே கருத்து தெரிவித்திருப்பது குறித்து கேட்டபோது, இன்னும் நான் கட்சியே தொடங்கவில்லையே, அதற்குள் எப்படி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும் என்று கேட்டார்.

மேலும், நிச்சயமாக தாம் முன்னறே கூறியபடி, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சி தொடங்கப்படும் என்றும், அதற்காக எப்போதும் தாம் தயாராக இருப்பதாகவும் கூறினார் நடிகர் ரஜினிகாந்த்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories