மீண்டும் சர்ச்சையில் ஸ்ரீரங்கம் கோயில்: கருவறைக்குள் காலணி வீசி ‘சைக்கோ’க்கள் அட்டகாசம்!

srirangam temple nuns - 2026

திருச்சியில் உள்ள புகழ்பெற்ற வைணவத் தலமான ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று காலை உள்ளே புகுந்த கும்பல் ஒன்று, அத்தனை பாதுகாப்புகளையும் கடந்து கோயில் கருவறைக்குள் சென்றுள்ளது. அந்த கும்பலில் ஒருவன், கோயில் அர்ச்சகரை கத்தியைக் காட்டி மிரட்டியதுடன், காலணியை வீசியுள்ளான். இது பக்தர்களிடம் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, பரிகார பூஜைகளுக்காக கோவில் நடை சாத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் கோயிலுக்குள், செருப்பு மற்றும் கத்தியுடன் உள்ளே நுழைந்த சமூக விரோத கும்பலில் ஒருவன் கருவறை அருகே சென்று, அங்கே இருந்த கோயில் அர்ச்சகரை கத்தியைக் காட்டி மிரட்டியதுடன், காலணியை எடுத்து கருவறைக்குள் எறிந்துள்ளான். சம்பந்தப்பட்ட நபரை காவலர்கள் பிடித்ததும் அவனுடன் வந்த மற்ற சமூக விரோத கும்பல் தப்பி ஓடியுள்ளது.

கத்தியைக் காட்டி மிரட்டியவனைப் பிடித்து, காவலர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த நபர் குறித்து விசாரித்தபோது, அவன் பெயர் தர்மராஜ் என்றும், கொத்தனாராக வேலை செய்து வருவதாகவும், திருவிடைமருதூர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த தனக்கு காதல் தோல்வி மற்றும் திருமணம் கைகூடாத விரக்தியில் இவ்வாறு செய்து விட்டதாகவும் கூறியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்று கூறியுள்ளனர்.

ஆனால், இந்தச் சம்பவம் குறித்து வேதனை தெரிவித்த பக்தர்கள், இவ்வாறு செய்துவிட்டு போலீஸில் மாட்டுகிறவர்கள் எல்லாம் எப்படி மனநலம் பாதிக்கப்பட்டவன் என்று தெரிவிக்கிறார்கள் என்று சந்தேகம் எழுப்புகின்றனர். இதன் பின்னணியில் ஏதேனும் அமைப்புகள் உள்ளனவா? திட்டமிட்ட ரீதியில் இந்தச் சம்பவத்தை அரங்கேற்றி, திசை திருப்ப ஏதாவது முயற்சி நடக்கின்றதா? வாசல் பகுதியில் இருந்து மெட்டல் டிடெக்டர் மூலம் உள்ளே நுழைந்த நபர், கத்தியை வைத்துக் கொண்டு, செருப்பையும் கையில் எடுத்துக் கொண்டு, மூலஸ்தானம் வரை வந்திருக்கிறான் என்றால், கோயில் பாதுகாவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர். போலீஸார் என்ன செய்கின்றனர் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

மன நலம் பாதிக்கப்பட்ட நபர் என்றால் இத்தனை கட்டுக்களையும் மீறி, அதெப்படி மிகக் குறிப்பாக கருவறைக்குள் வந்து செருப்பை வீசி, கத்தியைக் காட்டி மிரட்ட எண்ணம் கொண்டிருப்பான் என்றும், இவ்வளவு தூரம் நினைத்ததை ஒரு கும்பலாக வந்து சரியாகச் செய்தவன் மன நலம் பாதிக்கப்பட்டவனாக இருக்க முடியாது என்றும், இந்த சதித்திட்டத்தை போலீஸார் விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆனால் போலீஸார், அவன் ஒரு சைக்கோ தான் எனவும் அவனுக்கு பின்புலத்தில் எந்த அமைப்புகளும் இல்லை பதட்டமடைய வேண்டாம் என்றும் உறுதியாகக் கூறுகின்றனர்.

அண்மையில் தான் கிறிஸ்துவர்கள் சிலர் உள்ளே நுழைந்து பிரார்த்தனை செய்ததாகக் கூறப்பட்டது. அப்போதும் கோயில் பாதுகாவலர் உள்ளே அனுப்பிவைத்த விதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் ஆன்மிக அன்பர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

8 COMMENTS

  1. IT IS VERY CLEAR THAT ALL THE PUJARIS AND OTHER STAFF MUST KEEP THEMSELVES FIT AND EQUIPPED TO FIGHT SUCH ANTISOCIAL ELEMENTS WHO POSSIBLY ARE GETTING PAID BY UNKNOWN ORGN. PUJARIS CANNOT ASK THE HELP OF GODS WHICH NEVER HAPPENED IN ANY TEMPLE.

  2. தமிழத்தில் நடப்பது பார்தால் தேசவிரோத சகக்திகளும் இந்து விரோததசக்திகளும் தலை விரித்தாடகின்றனர் இதற்கு காரணம் நான் மற்றவர்களை குறைகூறவில்லை ஏனெனில் இந்துக்கள் தான் இந்து என் உனர மறுக்கின்றான் இதன் வேலைவைதான் நாம் அனுபவிக்கின்றோம். நாம் இந்து என்ற உணர்வும் இந்து என்ற தன்மானமும் இது நம் இந்து தேசம் நாம் இந்து உணர்வுள்ள இந்துக்களுடன் இநந்தது சசெயல்படுவேன் ஓர் இந்துவாக வாழ்வதுடன் நான் நான் வசிக்கும் பகுதியில் வாழும் இந்து குடும்பபங்களுடன் ஒற்றுமையாக வாழ்வோம் என் உறுதியேற்று என் இறுதி வாழ்நாள் வரை கடைபிடிப்பேன் என் உறுதியேற்போம் ! இந்துக்கள் ஒற்றுமையாக வாழ்வோம் அரசியலில் நமக்கு யார் (இந்து ) உறுதுணையாக இருப்பார்களே அவர்களுக்கு வாக்களிப்போம். இந்துக்களுக்காக பிரார்த்தனை செய்வோம். நம் வீட்டருகில் வசிக்கும் இந்துக்களுடன் ஒற்றுமையாக ஒன்றுபட்டு நட்புடன் வாழ்வோம். நாம் நம் சொந்தங்களுக்கும்இதை வவிளக்கவும். ஒற்றுமையே வாழ்வு சூளுரையேற்ப்போம்!! வாழ்க இந்துக்கள்!!!

  3. பாதுகாவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

  4. தக்க பாதுகாப்பு கருவிகள் வைக்க வேண்டும்.. திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வது போல் அனைத்து உடமைகளை சோதனைக்கு உட்படுத்த வேண்டும்…கண்டிப்பாக செல்போன் காமிரா க்கள் கருட மண்டபம் தாண்டி எடுத்துச்செல்ல அனுமதிக்க கூடாது…. மற்ற சன்னதிகளிலும்…தாயார். ராமானுஜர். சக்கரத்தாழ்வார்…. இவைகளை அனுமதிக்க கூடாது…. மூன்று வாசல்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் ஊழியர்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பு பணியாற்றி ஆலயத்தின் தூய்மை உறுதி செய்ய வேண்டும்

  5. அந்த சைக்கோ படத்தை வெளியிட வேண்டும்.ஆதார் அட்டையை சரி பார்க்கவேண்டும்

  6. குறிப்பாக ஸ்ரீரங்கம் கோவிலை மட்டும் தேர்ந்தெடுக்கவேண்டும்?

  7. இவை அனைத்தும் மோதி அவர்களின் ஆட்சியை குழப்ப அவரை பலவீனப்படுத்த உலக அளவில் பாவ மன்னிப்புக்கூட்டங்கள் நடத்தும் துரோகிகளின் சதி வேலைதான் என்பது அனைவரது மனசாட்சிக்கும் புரிந்து இருக்கும். இங்கு வந்த செல்வங்களை கொள்ளை அடித்தார்கள். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் நம்மை ஆண்டார்கள். நமது கலாச்சாரத்தை சீரழித்தார்கள். இப்போது மொத்தமாக இந்த மண்ணின் அடையாளத்தை மாற்ற மாபெரும் சாதியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இவை அனைத்துக்கும் காரணம் அறுபது ஆண்டு காளான் அரசியல் நடத்திய கான் கிராஸ். ஆலயங்களை அரசின் பிடியில் இருந்து மீட்க வேண்டும். அனைத்து பாரதநாடு மக்களும் (பாரத மண்ணின் சொந்தங்கள் மட்டுமே) ஒன்றுபட வேண்டும்.

  8. It is preposterous that the security personnel at the temple are do lax that they allow anti-Hindu characters inside the temple carrying knife and chappal! A team of devout police personnel should be entrusted with the job of investigating the lapses at the temple pertaining to it’s security.Action must be taken against the culprits!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories