திருப்பூர் வீரபாண்டி தோட்டத்துத் தெரு பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரது தாய் பார்வதி. (75 ) பார்வை குறைபாடு உள்ள தனது தாயை அழைத்துக்கொண்டு தாராபுரம் சாலையில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்குச் சென்ற அழகர்சாமி. அங்கு கண் செக்கப்செய்துவிட்டு வீடு திரும்ப பஸ் ஸ்டாப் க்கு நடந்து சென்றுள்ளனர்.

அப்போது இருவரும் ரோட்டைக் கடக்க முயன்ற போது, சாலையில் அதிவேகமாக வந்த ஆட்டோ இருவர் மீதும் பயங்கரமாக மோதியதில் . மகன் அழகர்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாய் பார்வதி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது வழியில் உயிரிழந்தார். வயதான தாயும் மகனும் எதிர்பாரா விதமாக விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


