சேலம் திட்டத்துக்கு விவசாயிகள் தாமாக முன்வந்து நிலம் வழங்கியுள்ளனர் : முதல்வர் எடப்பாடி

Published:

edappadi pazanisamy - 2026

சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு பல்வேறு விவசாயிகள் தாமாக முன்வந்து நிலத்தை வழங்கியுள்ளனர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் தாமாக நிலங்களை வழங்கியுள்ளனர்.

100க்கு நான்கைந்து விவசாயிகள் மட்டுமே நிலத்தைக் கொடுக்க மறுக்கின்றனர். முன்பை விட தற்போது வாகனங்கள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. அதற்கேற்றவாறு சாலை விரிவாக்கம் செய்யப்பட வேண்டியது அரசின் கடமை.

இதற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு மாநில அரசு உதவி செய்கிறது. முன்பை விட தற்போது அதிகளவு இழப்பீடு வழங்கப்டுகிறது. திமுக ஆட்சியில் அவ்வாறு வழங்கப்படவில்லை.

வீடு, கட்டடத்திற்கு இழப்பீடு வழங்கப்படும். சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு தொழிற்சாலைகள் வர வாய்ப்புள்ளதால், விமான நிலைய விரிவாக்கம் தேவைப்படுகிறது… என்று தெளிவாக்கினார்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img