திமுக.,வினர் கைது; ஆளுநர் ஆய்வு குறித்து என்ன சொல்கிறார் எடப்பாடி?

Published:

stalin edappadi - 2026

சேலம்: ஆளுநர் ஆய்வு மேற்கொள்வதை மாநில அரசு தடுக்க முடியாது என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆக்கப்பூர்வமான வளர்ச்சி திட்டங்கள் குறித்து கவர்னர் ஆய்வு செய்வதை தடுக்க முடியாது.

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்வதாலேயே கைது செய்யப்படுகின்றனர். நாமக்கல்லில், சட்டம் ஒழுங்கை சீர்குலைத்ததால் தான், திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

சேலம் இரும்பாலை தனியார் மயம் ஆவதை தலையிட்டு நிறுத்த வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம். நாடாளுமன்றத்திலும் இது குறித்து பேசியுள்ளோம்.

நீதிமன்றம் பொதுவானது. அதனை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்.

18 எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், அது குறித்து பேச வேண்டாம்… என்று கூறினார் முதல்வர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img