பூ, பொட்டு வைக்காதே என அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் உத்தரவு! பெற்றோர் போராட்டம்

Published:

kanyakumari protest for students - 2026

மாணவிகளை பூ, பொட்டு வைத்து வரக் கூடாது என்று அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டு முற்றுகைப் போராட்டம் நடத்தப் பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த புதூரில் மாணவிகள் எவரும் பூ, பொட்டு வைத்துக் கொண்டு பள்ளிக்கு வரக் கூடாது என உத்தரவிட்ட பெண் தலைமை ஆசிரியரைக் கண்டித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருப்பவர், ராணி பாய் என்பவர். இவர், மாணவிகள் எவரும் பூ, பொட்டு வைக்கக் கூடாது என்றும், கயிறு கட்டக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளதாக புகார் கூறப் பட்டது.

இதனைக் கண்டித்து, அரசுப் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர், காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில்  கலைந்து சென்றனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img