சிஏஏ.,வால் தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் இல்லை: எடப்பாடி

Published:

edappadi palanisamy - 2026

குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தை சொல்லிச் சொல்லி மக்களை ஏமாற்றி தவறான தகவலை பரப்பி, அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க எதிர்க்கட்சி முயற்சிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் மனோ தங்கராஜ், குடியுரிமைச் திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையின மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எந்த சிறுபான்மையினரும் பாதிக்கப்படவில்லை எனவும், அப்படி யாராவது ஒரு சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டிருந்தால் கூறுங்கள் அதற்கு பதில் சொல்கிறோம் என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய திமுக உறுப்பினர் மனோ தங்கராஜ், பாதிப்பு ஏற்படுவதால் தான் மற்ற மாநிலங்களில் இச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக கூறினார்.


அதற்கு பதிலளித்த முதலமைச்சர், CAA விவகாரத்தை சொல்லி சொல்லி மக்களை ஏமாற்றி தவறான தகவலை பரப்பி, அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

குடியுரிமைச் திருத்தச் சட்டம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது , அதனை திரும்ப பெறும் அதிகாரம் தங்களிடம் இல்லை என முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img