விமான நிலையத்தில் மாரடைப்பால் காலமான நடிகர்!

Published:

IMG 20200218 WA0020 - 2026

பெங்காலி நடிகர், முன்னாள் எம்பி தபஸ் பால் விமான நிலையத்தில் மாரடைப்பால் காலமானார்.

பெங்காலி நடிகர் திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பி தபஸ் பால் (61) செவ்வாய்க்கிழமை பிப்ரவரி 18 மும்பையில் மாரடைப்பால் காலமானார்.

IMG 20200218 WA0019 - 2026

அண்மையில் மும்பையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்ற தபஸ் செவ்வாய் அன்று விடியற்காலை 4 மணிக்கு கொல்கத்தா திரும்பிச் செல்வதற்காக ஏர்போர்ட்டுக்கு வந்தார். அதே நேரத்தில் இருந்தாற் போலிருந்து திடீரென்று இதயத்தில் வலி வந்ததால் அவரை அங்கிருந்து ஜுஹுவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு சிகிச்சை பெறும்போது செவ்வாயன்று காலை மரணமடைந்தார். தபஸ் பாலுக்கு மனைவி நந்தினி, மகள் ரோகிணி பால் உள்ளார்கள்.

IMG 20200218 WA0021 - 2026

இதயம் தொடர்பான பிரச்சினையால் கடந்த காலத்தில் கூட அவர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அவருடைய மரணம் குறித்து பெங்காலி நடிகர் மாலீக் அதிர்ச்சி தெரிவித்தார்.

சில காலமாகவே தபஸ் உடல்நிலை சரியின்றி உள்ளார். தபஸ்பால் 1980ல் தருண் மஜூம்தார் இயக்கத்தில் தாதர்கீர்த்தி திரைப்படத்தின் மூலம் பெங்காலி திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். பெங்காலியில் பல வெற்றிகரமான திரைப்படங்களில் நடித்த தபஸ் பால் 1984ல் வெளிவந்த அபோத் திரைப்படத்தில் மாதுரி தீக்ஷித் உடன் சேர்ந்து நடித்தார்.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

ஹிரன் நாக் இயக்கத்தில் வந்த அந்த சினிமா மாதுரி தீட்சித்தின் முதல் திரைப்படம் என்பது சிறப்பு. தன் முப்பது ஆண்டு நடிப்புத் துறையில் ப்ரோசென்ஜி சட்டர்ஜி, சௌமித்ர சட்டர்ஜி, ராக்கி, மௌசுமி சட்டர்ஜி போன்ற நடிகை நடிகர்களுடன் நடித்துள்ளார். இறுதியாக 2013ல் கிலாடி என்ற திரைப்படத்தில் நடித்தார்.

IMG 20200218 WA0022 - 2026

திருணாமுல் கட்சியில் இருமுறை எம்பியாகவும் ஒருமுறை எம்எல்ஏவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டிசம்பர் 2016ல் சிட்பண்ட் ஸ்காமில் கைதானார். 13 மாத சிறை தண்டனைக்குப் பின் பெயிலில் வெளிவந்தார்.

இவருடைய மரணத்திற்கு பெங்கால் திறைத்துறையினரும் திருணாமுல் கட்சித் தொண்டர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img