தமிழகத்தைக் காத்திட இந்து முன்னணி ஜூலை 15ல் சென்னையில் மாநாடு; அழைக்கிறார் ராம.கோபாலன்!

 

rama gopalan - 2026
ஜூலை 15, ஞாயிறு அன்று சென்னையில் மூன்று இடங்களில் இந்து முன்னணி தமிழகப் பாதுகாப்பு மாநாடு ஒன்றை நடத்துகிறது! இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்துமுன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன், மாநாட்டுக்கு ஆன்மிக அன்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைப்பதாகவும் அதில் தெரிவித்திருக்கிறார்.

அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகம், பயங்கரவாதிகளால், பிரிவினைவாதிகளால் குறி வைத்துத் தாக்கப்பட்டு வரும் சூழலில் மக்களை விழிப்படைய வைத்து தமிழகத்தைப் பாதுகாக்க இந்து முன்னணி கடந்த மாதம் துவங்கி, ஒவ்வொரு மூன்று மாவட்டங்களுக்கும் ஒரு கோட்ட மாநாடு என தொடர்ந்து நடத்தி வருகிறது.

தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கவும், பொது அமைதியை சீர்குலைக்கவும் தொடர்ந்து மக்கள் விரோதப் போராட்டங்கள் நடைபெற்று வருவதை தமிழகம் நன்கு அறியும். இந்நிலையில் இதனை மக்கள் சக்தி தான் தடுக்க முடியும். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் முதல் சேலம்-சென்னை எட்டு வழி சாலை திட்டத்திற்கான எதிர்ப்பு வரை என எப்போதும் எதிர்ப்பு, எதற்கும் எதிர்ப்பு என போய்க் கொண்டிருக்கிறது.

ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரம் முதலான பல பிரச்சனைகள் தமிழகத்தை சுற்றியுள்ள ஆபத்தை நமக்கு நன்கு உணர்த்துகிறது. தமிழக ஆலயங்களில் உள்ள இறைவனின் 7000 திருமேனிகள் செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இது தற்போது சிலைத் தடுப்பு பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. பொன். மாணிக்கவேல் குழுவின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆலய நிலங்கள் சுமார் 5000 ஏக்கர் தனியாருக்கு தாரை வார்க்க அதிகாரிகள் துணை போயுள்ளனர். உள்நாட்டில் கடத்தப்பட்ட ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகளை மீட்க 40 ஆண்டுகள், அதுவும் திறமையான அதிகாரி வந்த பின்தான் நடந்திருக்கிறது.

தொடர்ந்து கோயில்களில் இறைவன் திருமேனிகள் சேதப்படுத்தப் படுவதும், புனிதத்தைக் கெடுப்பதும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு செய்த குற்றவாளிகள் மனநிலை சரியில்லாதவர்கள் எனக் கூறி காவல்துறை வழக்கை முடிக்கிறது. இது ஆபத்தானது.

கோயில்கள் தான் இந்து சமுதாயத்தின், சமயத்தின் ஒருங்கிணைப்பு கேந்திரமாக இருந்து வருகிறது. தற்போது, கோயில்கள் பெரும் ஆபத்திற்கு உள்ளாகி வருகிறது.
மதமாற்றம், பயங்கரவாதம், பிரிவினைவாதிகளின் தேசவிரோதப் பிரச்சாரம் இளைஞர்களை திசை திருப்பி வருகிறது. இப்படிப்பட்ட அபாயங்களைத் தடுத்து நிறுத்த மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தவே இந்து முன்னணி தமிழக பாதுகாப்பு மாநாடுகளை நடத்தி வருகிறது. இம்மாநாடுகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும், ஆதரவும் இருந்து வருகிறது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

இதுவரை தர்மபுரி, அரியலூர், மதுரை, நெல்லை, வேலூர், காஞ்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் மாநாடுகள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன. வரும் ஜூலை 15ஆம் தேதி, ஞாயிறு அன்று மாலை 4 மணிக்கு, தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மூன்று மாவட்டங்களுக்கு தனித்தனியாக மாநாடுகள் ஒரே நேரத்தில், ஒரே தேதியில் நடைபெற இருக்கிறது.

தென்சென்னை மாவட்டம் சார்பில் தி.நகர் முத்துரங்கன் தெருவிலும், மத்திய சென்னை மாவட்டம் சார்பாக புரசைவாக்கம் தாணா தெருவிலும், வடசென்னை மாவட்டம் சார்பில் மூலக்கடையிலும் நடைபெற இருக்கிறது. தர்மமிகு சென்னை வாழ் பொதுமக்கள், ஆன்மிக பக்தர்கள், ஆன்மிக இயக்கங்கள், குழுக்கள், பெரியோர்கள், தாய்மார்கள் எல்லோரும் ஒத்துழைப்பு நல்கி, ஆதரவு அளித்து பெரும் திரளாக மாநாட்டிற்கு வந்திருந்து சிறப்பிக்க இந்து முன்னணி சார்பில் அன்புடன் அழைக்கிறோம். நமது இந்த நல் முயற்சிக்கு, காவல்துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் ஒத்துழைத்திட கேட்டுக்கொள்கிறோம். – என்று கூறியுள்ளார் ராம.கோபாலன்.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories