தேர்தல் சமயத்தில் ஊழலற்ற கட்சியோடு கூட்டணி அமைப்போம் என்று திருத்தணியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்காமல் புறக்கணித்தது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், தமிழக மக்களின் மனதை புண்படுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சொத்துவரி சம்பந்தமாக திருத்தம் மேற்கொண்டு அதிகபட்சம் 50 சதவீதம் வரை சொத்து வரியில் மாற்றம் செய்ய வேண்டும்என்று தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.


