9.50க்கு வெளியானது மருத்துவ அறிக்கை! அன்று அப்பல்லோ… இன்று காவேரி!

Published:

kauvery statement - 2026

சென்னை: உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து இரவு 9.50 க்கு மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டது காவேரி மருத்துவமனை நிர்வாகம்.

அந்த அறிக்கையில், கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப் பட்டதன் காரணமாக முன்னேற்றம் அடைந்துள்ளது. சிறப்பு மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து கண்காணித்து வருகிறார்கள். அவரது உடல் நிலை சீராகி வருகிறது. கருணாநிதி சீரான நிலைக்கு விரைவில் வந்துவிடுவார் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

இதை அடுத்து, காவேரி மருத்துவமனைக்கு வெளியில் திரண்டிருந்த திமுக., தொண்டர்கள் உற்சாகம் அடைந்து எழுந்து வா தலைவா என கோஷம் இட்டபடி இருந்தனர்.

இதனிடையே இன்று இரவு 1 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து சென்னைக்கு திரும்பி, காவேரி மருத்துவமனைக்குச் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img