தலைவர்கள் வரிசையா பாக்க வர்றத வெச்சி தப்பா யோசிக்காதீங்க: ‘நகைச்சுவை’ லியோனி!

 

liyoni - 2026
சென்னை: தலைவர்கள் வருவதை வைத்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கவலைப்பட வேண்டாம் என திமுக.,வின் நகைச்சுவப் பேச்சாளர் திண்டுக்கல் லியோனி கூறினார்.

திமுக., தலைவர் கருணாநிதி உடல் நலம் குன்றி, அவசர சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த இரு தினங்களாக அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல் நிலை குறித்து வதந்திகள் பரவின. இதனால் அவரது தொண்டர்கள் பெரிதும் கலவரமடைந்தனர். ஆயினும் அவரது உடல் நிலை நன்கு உள்ளது என்று காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இருப்பினும் கருணாநிதியைப் பார்ப்பதற்காக, வரிசையாக அரசியல் கட்சித் தலைவர்களும் வரத் தொடங்கினர். மாநில அரசியல் கட்சித் தலைவர்கள், தேசிய தலைவர்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என பலரும் காவேரி மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் தொண்டர்கள் இடையே மேலும் பதற்றம் அதிகரித்தது. கருணாநிதி குறித்த வதந்திகள் உண்மையோ என்று எண்ணும் அளவுக்கு அவர்களிடையே பதற்றம் அதிகரித்தது. இந் நிலையில் சனிக்கிழமை காவேரி மருத்துவமனைக்குச் சென்ற அக்கட்சியின் பேச்சாளர் திண்டுக்கல் லியோனி கருணாநிதியின் உடல் நலம் குறித்து அவரது குடும்பத்தாரிடம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தலைவர்கள் வருவதை வைத்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கவலை கொள்ள வேண்டாம்… என்று தொண்டர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு பதிலளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories