December 5, 2025, 5:58 PM
27.9 C
Chennai

பட்டாகத்தியுடன் பஸ் படிக்கட்டில் பயணித்தபடி கலாட்டா; கல்லூரி மாணவர் கைது!

chennai bus students - 2025

சென்னை: சென்னை மாநகரப்  பேருந்தின் படிக்கட்டில் பயணித்தபடி, பட்டாக் கத்தியை சாலையில் உரசியபடி மிரட்டி, வாகன ஓட்டிகளையும், பஸ்ஸி பயணம் செய்தவர்களையும் அச்சுறுத்திய கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப் பட்டார். இன்னொரு மாணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை செங்குன்றத்தில் இருந்து பிராட்வே செல்லும் 57 எஃப் பேருந்தின் இரு படிக் கட்டுகளிலும் நின்று தொங்கியபடி மாணவர்கள் சிலர் முகத்தை கைக்குட்டையால் மறைத்துக் கொண்டு பயணித்தனர்.

படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்ற அந்த மாணவர்களில் முன்னும் பின்னுமாய் இருவர், கையில் உள்ள பட்டாக்கத்தியால் சாலையில் உரசி தீப்பொறி ஏற்படுத்தியபடி செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவியது. இதனால் பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளும், பேருந்தின் அருகில் இரு சக்கர வாகனங்களில் செல்வோரும் பீதியுடன் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இதை பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தவர் வீடியோவாக பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார்.

இந்நிலையில், போலீஸார் அந்த மாணவர்களில் ஒருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஒரு மாணவரை தேடி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற மாணவர்களையும் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கெனவே சென்னையில் இதே போல் வியாசர்பாடி பகுதியில் புறநகர்  மின்சார ரயில்களில் பயணம் செய்த மாணவர்கள் பட்டாக்கத்தியை ரயில்வே பிளாட்பார்மில் தேய்த்தபடி சென்றனர். அவர்களை பிடித்த போலீசார், புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories