பட்டாகத்தியுடன் பஸ் படிக்கட்டில் பயணித்தபடி கலாட்டா; கல்லூரி மாணவர் கைது!

chennai bus students - 2026

சென்னை: சென்னை மாநகரப்  பேருந்தின் படிக்கட்டில் பயணித்தபடி, பட்டாக் கத்தியை சாலையில் உரசியபடி மிரட்டி, வாகன ஓட்டிகளையும், பஸ்ஸி பயணம் செய்தவர்களையும் அச்சுறுத்திய கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப் பட்டார். இன்னொரு மாணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை செங்குன்றத்தில் இருந்து பிராட்வே செல்லும் 57 எஃப் பேருந்தின் இரு படிக் கட்டுகளிலும் நின்று தொங்கியபடி மாணவர்கள் சிலர் முகத்தை கைக்குட்டையால் மறைத்துக் கொண்டு பயணித்தனர்.

படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்ற அந்த மாணவர்களில் முன்னும் பின்னுமாய் இருவர், கையில் உள்ள பட்டாக்கத்தியால் சாலையில் உரசி தீப்பொறி ஏற்படுத்தியபடி செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவியது. இதனால் பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளும், பேருந்தின் அருகில் இரு சக்கர வாகனங்களில் செல்வோரும் பீதியுடன் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இதை பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தவர் வீடியோவாக பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார்.

இந்நிலையில், போலீஸார் அந்த மாணவர்களில் ஒருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஒரு மாணவரை தேடி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற மாணவர்களையும் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கெனவே சென்னையில் இதே போல் வியாசர்பாடி பகுதியில் புறநகர்  மின்சார ரயில்களில் பயணம் செய்த மாணவர்கள் பட்டாக்கத்தியை ரயில்வே பிளாட்பார்மில் தேய்த்தபடி சென்றனர். அவர்களை பிடித்த போலீசார், புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories