உச்ச நீதிமன்ற கள்ளக் காதல் தீர்ப்புக்கு முதல் பலி! அப்பாவிப் பெண் தற்கொலை! திருந்துவரா தீர்ப்பாளிகள்?!

hanging sentence 3 - 2026

சென்னை: கள்ளக் காதலுக்கு தடையில்லை என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டதாகச் சொல்லி கணவன் கடுமையாகக் கத்தி சண்டை போட்டதால் விரக்தி அடைந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கள்ளக்காதல் குறித்த உச்ச நீதிமன்றத்தின் கொடூரமான தீர்ப்பின் பின்னே மறைந்துள்ள உண்மை முகம் இதுதான் என்று கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள் பொதுமக்கள்.

சென்னை நெசப்பாக்கம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பால் பிராங்க்ளின். இவர், அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். ஜான் பால், கடந்த 2016ஆம் ஆண்டில் புஷ்பலதா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனிடையே ஜான்பால் தான் வேலை செய்யும் இடத்தில் வேறொரு பெண்ணுடன் நெருங்கிப் பழகியுள்ளார். இதை அறிந்த புஷ்பலதா, தனது கணவரை கண்டித்துள்ளார். இதைத் தொடர்ந்து தம்பதியரிடம் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் இரவு நேரத்தில், இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஜான்பால் மிகவும் சீரியஸாக உச்ச நீதிமன்றமே கள்ளக் காதல் வைத்துக் கொள்வது சட்டப்படி தவறில்லை என்று கூறியுள்ளது, எனவே நீ என்னைப் பற்றி எங்கு புகார் செய்தாலும், அது குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது, என்னை எவராலும் எதுவும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார் புஷ்பலதா. உச்ச நீதிமன்றமே கள்ளக் காதலுக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்துள்ளதால், இனி தன் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறதோ என்ற கவலையிலும் மனவேதனையிலும் இருந்த புஷ்பலதா, தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த எம்ஜிஆர் நகர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். புஷ்பலதாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

புஷ்பலதாவின் சாவுக்கு உச்ச நீதிமன்றத்தின் கள்ளக்காதல் தீர்ப்பே காரணம் என்று பொதுமக்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories