உச்ச நீதிமன்ற கள்ளக் காதல் தீர்ப்புக்கு முதல் பலி! அப்பாவிப் பெண் தற்கொலை! திருந்துவரா தீர்ப்பாளிகள்?!

hanging sentence 3 - 2026

சென்னை: கள்ளக் காதலுக்கு தடையில்லை என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டதாகச் சொல்லி கணவன் கடுமையாகக் கத்தி சண்டை போட்டதால் விரக்தி அடைந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கள்ளக்காதல் குறித்த உச்ச நீதிமன்றத்தின் கொடூரமான தீர்ப்பின் பின்னே மறைந்துள்ள உண்மை முகம் இதுதான் என்று கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள் பொதுமக்கள்.

சென்னை நெசப்பாக்கம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பால் பிராங்க்ளின். இவர், அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். ஜான் பால், கடந்த 2016ஆம் ஆண்டில் புஷ்பலதா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனிடையே ஜான்பால் தான் வேலை செய்யும் இடத்தில் வேறொரு பெண்ணுடன் நெருங்கிப் பழகியுள்ளார். இதை அறிந்த புஷ்பலதா, தனது கணவரை கண்டித்துள்ளார். இதைத் தொடர்ந்து தம்பதியரிடம் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் இரவு நேரத்தில், இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஜான்பால் மிகவும் சீரியஸாக உச்ச நீதிமன்றமே கள்ளக் காதல் வைத்துக் கொள்வது சட்டப்படி தவறில்லை என்று கூறியுள்ளது, எனவே நீ என்னைப் பற்றி எங்கு புகார் செய்தாலும், அது குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது, என்னை எவராலும் எதுவும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார் புஷ்பலதா. உச்ச நீதிமன்றமே கள்ளக் காதலுக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்துள்ளதால், இனி தன் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறதோ என்ற கவலையிலும் மனவேதனையிலும் இருந்த புஷ்பலதா, தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த எம்ஜிஆர் நகர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். புஷ்பலதாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

புஷ்பலதாவின் சாவுக்கு உச்ச நீதிமன்றத்தின் கள்ளக்காதல் தீர்ப்பே காரணம் என்று பொதுமக்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories