February 21, 2026, 11:14 PM
26.7 C
Chennai

உச்ச நீதிமன்ற கள்ளக் காதல் தீர்ப்புக்கு முதல் பலி! அப்பாவிப் பெண் தற்கொலை! திருந்துவரா தீர்ப்பாளிகள்?!

hanging sentence 3 - 2026

சென்னை: கள்ளக் காதலுக்கு தடையில்லை என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டதாகச் சொல்லி கணவன் கடுமையாகக் கத்தி சண்டை போட்டதால் விரக்தி அடைந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கள்ளக்காதல் குறித்த உச்ச நீதிமன்றத்தின் கொடூரமான தீர்ப்பின் பின்னே மறைந்துள்ள உண்மை முகம் இதுதான் என்று கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள் பொதுமக்கள்.

சென்னை நெசப்பாக்கம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பால் பிராங்க்ளின். இவர், அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். ஜான் பால், கடந்த 2016ஆம் ஆண்டில் புஷ்பலதா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனிடையே ஜான்பால் தான் வேலை செய்யும் இடத்தில் வேறொரு பெண்ணுடன் நெருங்கிப் பழகியுள்ளார். இதை அறிந்த புஷ்பலதா, தனது கணவரை கண்டித்துள்ளார். இதைத் தொடர்ந்து தம்பதியரிடம் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் இரவு நேரத்தில், இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஜான்பால் மிகவும் சீரியஸாக உச்ச நீதிமன்றமே கள்ளக் காதல் வைத்துக் கொள்வது சட்டப்படி தவறில்லை என்று கூறியுள்ளது, எனவே நீ என்னைப் பற்றி எங்கு புகார் செய்தாலும், அது குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது, என்னை எவராலும் எதுவும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார் புஷ்பலதா. உச்ச நீதிமன்றமே கள்ளக் காதலுக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்துள்ளதால், இனி தன் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறதோ என்ற கவலையிலும் மனவேதனையிலும் இருந்த புஷ்பலதா, தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த எம்ஜிஆர் நகர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். புஷ்பலதாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

புஷ்பலதாவின் சாவுக்கு உச்ச நீதிமன்றத்தின் கள்ளக்காதல் தீர்ப்பே காரணம் என்று பொதுமக்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Topics

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Entertainment News

Popular Categories