ஸ்டாலின் மீதான 7 அவதூறு வழக்குகளும் ஒத்திவைப்பு! நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு

01 July31 M K Stalin - 2026

ஸ்டாலின் மீதான 7 அவதூறு வழக்குகளும் வரும் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது. அடுத்த முறை நேரில் ஆஜராவதில் இருந்து ஸ்டாலினுக்கு விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அரசு குறித்து அவதூறாக பேசியதாக மு.க. ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்குகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரனார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அரசின் செயல்பாடுகளை விமர்சித்ததாக, கடந்த 2012ஆம் ஆண்டில் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. அதன்பிறகு அவர் மீது 6 அவதூறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் அவை அனைத்தும் நிலுவையில் இருந்தன.

இந்நிலையில், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், மு.க.ஸ்டாலின் மீதான 7 வழக்குகளும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. இதையடுத்து, 2 வாரங்களுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் மீதான வழக்குகளில் ஆஜராக விலக்கு கோரப்பட்டது. நேரில் ஆஜரானால் மட்டுமே அதன்பிறகு விலக்கு அளிக்க முடியும் என நீதிபதி உத்தரவிட்டதால், இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், வழக்கு விசாரணைக்காக மு.க.ஸ்டாலின் ஆஜரானார். இதையடுத்து, அடுத்த விசாரணைகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக விலக்களித்த நீதிபதி சாந்தி, வழக்கு விசாரணையை வரும் 31ஆம் தேதி ஒத்திவைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories