சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சடலத்தை எலி கடித்து குதறிய அவலம்

images 1 - 2026

சிதம்பரம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த இளைஞரின் சடலத்தை எலி கடித்து குதறியதால் பரபரப்பு. மருத்துவர்கள் அலட்சியமாக பேசியதாக நண்பர்கள் குற்றச்சாட்டு. அரசு மருத்துவமனையில் சடலங்களுக்கு பாதுகாப்பில்லை என புகார்.

சிதம்பரத்தை அடுத்த தண்டேஸ்வர நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்தீஸ்வரன்(22). பட்டதாரி இளைஞரான இவர் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் சிதம்பரம் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வைத்தீஸ்வரனின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவமனையின் சவக் கிடங்கில் வைத்தீஸ்வரனின் சடலம் வைக்கப்பட்டது.

இதையடுத்து இன்று பிரேத பரிசோதனைக்காக வைத்தீஸ்வரனின் சடலம் சவக்கிடங்கில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. அப்போது சடலத்தின் மூக்கை எலி கடித்து குதறி இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இதுகுறித்து சிதம்பரம் அரசு மருத்துவமனை டாக்டர்களிடம் கூறியுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் இதை அலட்சியப்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

இதுபற்றி கூறிய வைத்தீஸ்வரனின் நண்பர்கள், நேற்று உயிரிழந்த நண்பரின் சடலத்தை இன்று பார்த்தபோது மூக்கை எலி கடித்து குதறி இருந்ததாகவும், இதுபற்றி டாக்டர்களிடம் கேட்டபோது அலட்சியமாக பதிலளித்ததாகவும் குற்றம் சாட்டியவர்கள், இறந்து விட்டார் என்பதால் அந்த உடலை பாதுகாப்பு இல்லாமலா வைப்பார்கள். அதனால் இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் கூறினர்.

1 COMMENT

  1. படிக்கும் போது ரொம்ப வருத்தமாக உள்ளது.தேவையான பணியாளர்கள் இல்லாதது காரணமாக இருக்கலாம்.மாவட்ட நிர்வாகம் உடனடியாக சரி செய்யும் என நம்புவோம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories