![சபரிமலை பெண்கள் நுழைந்த விவகாரம்: இந்து அமைப்பு ஆர்ப்பாட்ட அழைப்பு! 1 sabarimala women entered](https://dhinasari.com/wp-content/uploads/2019/01/sabarimala-women-entered.jpg)
சபரிமலையில் ஐயப்பனின் பிரம்மச்சாரியத்தை கெடுக்கும் வகையில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த துர்கா என்ற 40 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் சில பெண்களை சபரிமலையில் திருட்டுத்தனமாக தரிசனம் செய்ய வைத்துள்ளனர்.
சபரிமலை பாரம்பரியத்தை சீர்குலைக்கும் வகையில் உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்களின் மனதையும் வேதனையடைய செய்துள்ளது. எனவே, கேரள கம்யூனிஸ்ட் அரசை கண்டித்து பாரத் இந்து முன்னணி சார்பில் சென்னை புரசைவாக்கம் டவுட்டன் சிக்னல் அருகே இன்று பகல் 2 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது… என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.