February 22, 2026, 10:16 AM
26.1 C
Chennai

புளியரை அம்மன் கோயிலில் போலீஸார் பூஜை! மக்களைக் கவர்ந்த புதிய அணுகுமுறை!

puliyarai police - 2026

நெல்லை மாவட்டம் புளியரையில் உள்ள செண்பகவல்லி அம்மன் ஆலயத்தில் காவல்துறை சார்பில் சிறப்பு பூஜை நடத்தப் பட்டது.

இந்த சிறப்பு பூஜையில் தென்காசி காவல்துறை உதவி கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் கலந்து கொண்டு புளியரை காவல் எல்லைக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சமுதாயத் தலைவர்களை வரவேற்று பொன்னாடை அணிவித்து சிறப்பித்தனர். இந்தக் கோயிலில் வருடம் தோறும் இந்த சிறப்பு பூஜைகளை போலீஸார் செய்வது வழக்கம்.

காவல்துறையினரின் இந்தப் புதிய அணுகுமுறை மக்களை கவர்ந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இருப்பினும் இந்த முறை போலீஸாரின் இந்த சிறப்பு பூஜையும், சமுதாயப் பெரியவர்களை அழைத்து பொன்னாடை அணிவித்தலும் கூடுதல் கவனம் பெற்றது.

முன்னதாக, கடந்த பிப்.25ஆம் தேதி, புளியரை அருகே பகவதியாபுரம் கிராமத்தில், இரு தரப்பு பிரச்னையில் ஒரு விநாயகர் கோயிலை அகற்றினர் புளியரை போலீஸார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் அதிகம் வாழும் தெருவின் முனையில் கிடந்த காலி இடத்தில், அரசின் புறம்போக்கு நிலத்தில், கிறிஸ்துவ அமைப்பு ஒன்று குருசடி எனப்படும் சிறிய அளவிலான சர்ச் ஒன்றைக் கட்ட முயன்றுள்ளது. அதனை அந்தப் பகுதியினர் தட்டிக் கேட்டதுடன் அவர்களை அங்கிருந்து அப்புறப் படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், அந்த இடத்தில் மீண்டும் வேற்று மதத்தினர் ஆக்கிரமிப்பு வரக்கூடாது என்ற எண்ணத்தில், அந்தத் தெருவில் இருந்த சிலர், அங்கே சிறிய விநாயகர் கோயில் கட்டி வந்தனர்! ஆனால், அதே சமுதாயத்தைச் சேர்ந்த இன்னொரு தரப்பினர் இதுகுறித்து புகார் அளிக்க, முறையான அனுமதி இன்றி புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட அந்தக் கோயிலை அகற்ற போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். பேச்சுவார்த்தைகள் நடத்தப் பட்டன.

இந்நிலையில், இதை அறிந்து இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் கிராம மக்களுக்கு ஆதரவாக களம் இறங்கினர். தொடர்ந்து, செங்கோட்டை ஒன்றியம் புளியரை பஞ்சாயத்து பகவதிபுரம் கிராமத்தில், கிராம மக்கள் புதிதாக விநாயகர் சிலையை வைத்து வழிபட்டனர். அதற்காக, ஹிந்து முன்னணி சார்பில் கொடியேற்றப் பட்டு, சமர்ப்பணம் செய்யப் பட்டது.

இந்த விழாவில், இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த, ஆறுமுகம், மாசாணம், திருமலை, அருணாசலம், எஸ்.முருகன், சுரேஷ், பிஜேபி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்ராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

puliyarai temple - 2026

விநாயகர் சிலை திடீரென்று எந்த அறிவிப்பும் இன்றி வைக்கப்பட்டதால், போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இதை அடுத்து, அதே நாளில் அந்தக் கட்டடத்தில் திடீரென்று வைக்கப்பட்ட விநாயகர் சிலையை போலீஸார் அகற்றி, செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வைத்துள்ளனர். அப்போது, அந்தக் கோயில் பகுதியைச் சார்ந்த பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடினர்.

puliyaraitempledestroy - 2026

இந்நிலையில், அந்தப் பகுதியில் மேலும் பதற்றம் ஏற்படாமலும், அனைத்து சமுதாயங்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், போலீஸார் முயற்சி மேற்கொண்டனர். அதன் ஒருபகுதியாக புளியரை செண்பகவல்லி அம்மன் கோயிலில் போலீஸார் ஏற்பாடு செய்த இந்த சிறப்பு பூஜை கூடுதல் கவனம் பெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories