காங்கிரஸுக்கு தாவுகிறாரா அன்வர் ராஜா?!

anwarrajamp - 2026

அவசர பத்திரிகையாளர் சந்திப்பு என்று குறிப்பிட்டு, இந்தச் செய்தி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது.

இன்று மதியம் 2.30 மணிக்கு முன்னாள் தமிழக அமைச்சரும், தற்போதைய தமிழ்நாடு வக்ஃப் போர்ட் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர் ராஜா அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளார். பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும். இடம் : தமிழ்நாடு வக்ஃப் வாரியம், மண்ணடி, சென்னை – 1. – என்பது அனுப்பப் பட்ட செய்தி.

முன்னதாக, அதிமுக., எம்பி., அன்வர் ராஜா, தனக்கு மீண்டும் ராமநாதபுரம் தொகுதி கிடைக்காது என்று தகவல் பெறப்பட்டதால், அங்கே போட்டியிட வாய்ப்பு இல்லாத நிலையில், அதிமுக.,வை விட்டு விலகுவார் என்று கூறப் பட்டது.

அதே நேரம், பாஜக.,வுடன் அதிமுக., கூட்டணி வைத்துள்ளதால், அந்தக் காரணத்தைச் சொல்லியே அவர் அதிமுக.,வில் இருந்து விலகுவார் என்றும், அதன் பின்னர் அவர் காங்கிரஸில் சேருவார் என்றும் கூறப்பட்டது.

காங்கிரஸில் சேர்ந்தாலும், ஏற்கெனவே திமுக., கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக் கட்சி ராமநாதபுரம் தொகுதியைக் கேட்டு நிற்பதாகவும், அதனால், காங்கிரஸில் சேர்ந்து ராமநாதபுரம் தொகுதியை குறிவைத்தாலும் அன்வர் ராஜாவுக்கு வாய்ப்பு இல்லை என்றும் தகவல்கள் உலாவருகின்றன.

ஏற்கெனவே அன்வர் ராஜாவும், கரூர் தம்பிதுரையும் தான் பாஜக., கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி வந்தனர். அன்வர் ராஜா ஒரு படி மேலே போய், அதிமுக., சிலபஸில் இல்லாத பாடங்களை எல்லாம் மக்களவையில் முத்தலாக் விவகாரத்தின் போது எடுத்து அளந்து விட்டார்.  இது அதிமுக.,வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

மேலும், ராமநாதபுரம் நிகழ்ந்த கலவரங்கள், மத மோதல்களில்  ஹிந்து இயக்கப் பிரமுகர்கள், பாஜக.,வினர் மீது கடும் எதிர்ப்பையும் தெரிவித்து, ஒடுக்குவதற்கான முயற்சிகளிலும் அன்வர் ராஜா ஈடுபட்டார் என்று பாஜக.,வினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் கூட்டணி என்று வரும்போது, அன்வர் ராஜாவுக்கு இந்து இயக்கங்களில் ஆதரவு கிடைக்காது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரது செய்தியாளர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறது. அதிமுக., பாஜக.,வுடன்  கூட்டணி சேர்ந்ததால், சிறுபான்மைக்கு எதிரான போக்கு என்று பிரசாரம் செய்யவும், அதனால்தான் தாம் வெளியேறியதாகவும் அன்வர் ராஜா சொல்லக் கூடும் என்பதால், செய்தியாளர்கள் பரபரப்பாகி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories