அமைதி ஆக்கப்பட்ட அழகிரி..! பொங்குவாரா? பதுங்குவாரா?

azhagiri - 2026

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு செய்தியாளர்களை சந்திப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் முக.அழகிரி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

இதை அடுத்து, அடுத்தடுத்த அரசியல் பரபரப்பு இன்றுசெய்தியாளர்களை தொற்றிக் கொண்டிருக்கிறது. ஞாயிறு பொழுது இன்று காலையே அமமுக., து.பொ.செ டிடிவி தினகரனால் பிள்ளையார் சுழி இடப்பட்டு, தொடங்கப் பட்டிருக்கிறது. தொடர்ந்து அதிமுக., மற்றும் கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிப் பட்டியலை ஓபிஎஸ் வெளியிட்டார்.

அடுத்து… மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலும் இன்று காலை வெளியாகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடுகிறார். இதனால் அண்ணா அறிவாலயம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்நிலையில் திமுக.,வுக்கு மீண்டும் சூடு கொடுக்கத் தொடங்கி இருக்கிறார் மு.கருணாநிதியின் மகன் மு.க அழகிரி. முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் மு.க அழகிரி மீண்டும் திமுகவில் சேர்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால்,  திமுக தலைவர் ஸ்டாலின் அதனை நிராகரித்தார். அழகிரி மீண்டும் கட்சியில் இடம்பெறாத அளவுக்கு பார்த்துக் கொண்டார். இதை அடுத்து, மு.க அழகிரி சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி சென்றார். ஆனால் அது எதிர்பார்த்த எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை!

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

பின்னர் அரசியல் களத்தில் மு.க. அழகிரி அமைதி ஆக்கப் பட்டார். அதிரடி அரசியல் செய்து வந்த அழகிரி, காலத்தின் கட்டாயத்தாலும் கருணாநிதியின் ஓரவஞ்சத்தாலும் அமைதி நிலைக்குச் சென்றார். அவ்வப்போது சத்தம் போட்டாலும், அது காற்றில் கரைந்த நிலையிலேயே இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் அதிரடி அரசியல் களத்துக்கு அழகிரி வந்துள்ளதாகக் கூறப் படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல், 18 தொகுதி இடைத்தேர்தல் காரணமாக அவர் மீண்டும் அரசியலில் ஈடுபட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

திமுக இன்று தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டபிறகு மு.க. அழகிரி செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகக் கூறினார். இந்த சந்திப்பில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நான் பேசுவேன் என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். இதை அடுத்து சென்னையில் செய்தீயாளர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories