அமைதி ஆக்கப்பட்ட அழகிரி..! பொங்குவாரா? பதுங்குவாரா?

azhagiri - 2026

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு செய்தியாளர்களை சந்திப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் முக.அழகிரி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

இதை அடுத்து, அடுத்தடுத்த அரசியல் பரபரப்பு இன்றுசெய்தியாளர்களை தொற்றிக் கொண்டிருக்கிறது. ஞாயிறு பொழுது இன்று காலையே அமமுக., து.பொ.செ டிடிவி தினகரனால் பிள்ளையார் சுழி இடப்பட்டு, தொடங்கப் பட்டிருக்கிறது. தொடர்ந்து அதிமுக., மற்றும் கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிப் பட்டியலை ஓபிஎஸ் வெளியிட்டார்.

அடுத்து… மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலும் இன்று காலை வெளியாகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடுகிறார். இதனால் அண்ணா அறிவாலயம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்நிலையில் திமுக.,வுக்கு மீண்டும் சூடு கொடுக்கத் தொடங்கி இருக்கிறார் மு.கருணாநிதியின் மகன் மு.க அழகிரி. முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் மு.க அழகிரி மீண்டும் திமுகவில் சேர்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால்,  திமுக தலைவர் ஸ்டாலின் அதனை நிராகரித்தார். அழகிரி மீண்டும் கட்சியில் இடம்பெறாத அளவுக்கு பார்த்துக் கொண்டார். இதை அடுத்து, மு.க அழகிரி சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி சென்றார். ஆனால் அது எதிர்பார்த்த எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை!

பின்னர் அரசியல் களத்தில் மு.க. அழகிரி அமைதி ஆக்கப் பட்டார். அதிரடி அரசியல் செய்து வந்த அழகிரி, காலத்தின் கட்டாயத்தாலும் கருணாநிதியின் ஓரவஞ்சத்தாலும் அமைதி நிலைக்குச் சென்றார். அவ்வப்போது சத்தம் போட்டாலும், அது காற்றில் கரைந்த நிலையிலேயே இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் அதிரடி அரசியல் களத்துக்கு அழகிரி வந்துள்ளதாகக் கூறப் படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல், 18 தொகுதி இடைத்தேர்தல் காரணமாக அவர் மீண்டும் அரசியலில் ஈடுபட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

திமுக இன்று தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டபிறகு மு.க. அழகிரி செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகக் கூறினார். இந்த சந்திப்பில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நான் பேசுவேன் என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். இதை அடுத்து சென்னையில் செய்தீயாளர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories