December 6, 2025, 10:29 AM
26.8 C
Chennai

அமைதி ஆக்கப்பட்ட அழகிரி..! பொங்குவாரா? பதுங்குவாரா?

azhagiri - 2025

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு செய்தியாளர்களை சந்திப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் முக.அழகிரி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

இதை அடுத்து, அடுத்தடுத்த அரசியல் பரபரப்பு இன்றுசெய்தியாளர்களை தொற்றிக் கொண்டிருக்கிறது. ஞாயிறு பொழுது இன்று காலையே அமமுக., து.பொ.செ டிடிவி தினகரனால் பிள்ளையார் சுழி இடப்பட்டு, தொடங்கப் பட்டிருக்கிறது. தொடர்ந்து அதிமுக., மற்றும் கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிப் பட்டியலை ஓபிஎஸ் வெளியிட்டார்.

அடுத்து… மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலும் இன்று காலை வெளியாகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடுகிறார். இதனால் அண்ணா அறிவாலயம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்நிலையில் திமுக.,வுக்கு மீண்டும் சூடு கொடுக்கத் தொடங்கி இருக்கிறார் மு.கருணாநிதியின் மகன் மு.க அழகிரி. முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் மு.க அழகிரி மீண்டும் திமுகவில் சேர்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால்,  திமுக தலைவர் ஸ்டாலின் அதனை நிராகரித்தார். அழகிரி மீண்டும் கட்சியில் இடம்பெறாத அளவுக்கு பார்த்துக் கொண்டார். இதை அடுத்து, மு.க அழகிரி சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி சென்றார். ஆனால் அது எதிர்பார்த்த எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை!

பின்னர் அரசியல் களத்தில் மு.க. அழகிரி அமைதி ஆக்கப் பட்டார். அதிரடி அரசியல் செய்து வந்த அழகிரி, காலத்தின் கட்டாயத்தாலும் கருணாநிதியின் ஓரவஞ்சத்தாலும் அமைதி நிலைக்குச் சென்றார். அவ்வப்போது சத்தம் போட்டாலும், அது காற்றில் கரைந்த நிலையிலேயே இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் அதிரடி அரசியல் களத்துக்கு அழகிரி வந்துள்ளதாகக் கூறப் படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல், 18 தொகுதி இடைத்தேர்தல் காரணமாக அவர் மீண்டும் அரசியலில் ஈடுபட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

திமுக இன்று தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டபிறகு மு.க. அழகிரி செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகக் கூறினார். இந்த சந்திப்பில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நான் பேசுவேன் என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். இதை அடுத்து சென்னையில் செய்தீயாளர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories