வெற்றியை திசை திருப்பவே ஐ.டி. சோதனை: ‘தொகுதிக்கு ரூ.50 லட்சம் தருவதாக சொன்ன’ துரைமுருகன்!

duraimurugan 1 - 2026

தொகுதியில் தனது மகனின் வெற்றி வாய்ப்பை தடுக்கவே தன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது என்று, தொகுதி நிர்வாகிகளுக்கு போட்டி வைத்து முதலிடம் பிடிக்கும் தொகுதிக்கு ரூ.50 லட்சம் தருவதாகச் சொன்ன திமுக பொருளாளர் துரைமுருகன், செய்தியாளர்களிடம் கூறினார்.

வேலூரில் உள்ள துரைமுருகன் வீட்டில் பெரும் போராட்டங்கள், வாக்குவாதங் களுக்குப் பின்னர், இன்று அதிகாலை 3 மணி அளவில் தொடங்கி, இன்று காலை 8.30 வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

duraimurugan house2 - 2026வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ய இருப்பதாகவும், பரிசுப் பொருள்கள் கொடுக்கப் படுவதாகவும் வந்த தகவலை அடுத்து தேர்தல் அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, ஆந்திரா சித்தூர் செல்லும் சாலையில் உள்ள துரைமுருகன் மகன் கதிரானந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி மற்றும் வேலூர் பகுதி திமுக., வின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

இதை அடுத்து, இந்த சோதனை குறித்து வேலூரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், எனக்கே பூசாண்டி காட்டுகிறீர்களா?! சோதனை என்ற பூச்சாண்டிக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். வேலூர் தொகுதியில் போட்டியிடும் எனது மகன் கதிரானந்தின் வெற்றியை திசை திருப்பவே இந்த சோதனை நடைபெற்றுள்ளது. எங்களை தேர்தலில் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல், மத்திய மாநில அரசுகள் வருமான வரித்துறையை வைத்து முதுகில் குத்துகின்றனர்.

duraimurugan house - 2026

பரபரப்பாக அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள இந்த நேரத்தில் சோதனை நடத்துவதற்கான காலநேரம் இது இல்லை என்று கூறினார் துரைமுருகன்!

முன்னதாக, தனது மகனுக்கு அதிக பட்ச வாக்குகளைப் பெற்றுத் தரும் தொகுதி பொறுப்பாளருக்கு ரூ. 50 லட்சம் தனது சொந்த நிதியில் இருந்து எடுத்து பரிசளிப்பதாகக் கூறியிருந்தார் துரை முருகன்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories