திருந்தாத இளசுகள்! 9ம் வகுப்பு மாணவிக்கு கூல் ட்ரிங்க்ஸ் கொடுத்து கூட்டு பலாத்காரம்! கல்லூரி மாணவன் வெறிச்செயல்!

girl attack image - 2026

புதுச்சேரியில் 9ஆம் வகுப்பு மாணவியை காதலிப்பதாகக் கூறி, அவரை வலையில் வீழ்த்தி, தன் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளர்.

புதுச்சேரி மாட்டுக்காரன்சாவடியைச் சேர்ந்த 13 வயது மாணவி அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த நரேஷ் என்ற கல்லூரி மாணவர், இவரைக் காதலிப்பதாகக் கூறி தன் வலையில் வீழ்த்தியுள்ளார்.

வெள்ளிக் கிழமை மதியம் வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம், தான் தனியார் விடுதியில் அறை எடுத்திருப்பதாகவும், அங்கே சென்று பொழுது போக்கிவிட்டு வரலாம் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

அதை நம்பி அந்த மாணவியும் அவருடன் தனியார் விடுதிக்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அந்த மாணவிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார் அந்த மாணவர். அதன் பின்னர் அந்த மாணவி மயங்கியதும், அவரை பலாத்காரம் செய்த நரேஷ், தமது நண்பர்களான ராஜா (32), வெங்கடேஷ் (20) ஆகியோரை போனில் அழைத்துள்ளார். தொடர்ந்து மூவரும் சேர்ந்து மாணவியை கூட்டு பலாத்காரம் செய்ததாகக் கூறப் படுகிறது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

- 2026

இதனிடையே அந்த மாணவியின் தாயார், தன் மகளைக் காணவில்லை என்று ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதை அடுத்து மாணவி குறித்து போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், தங்கள் வேலை முடிந்ததால் இரவு பத்து மணி அளவில் அந்த மாணவியை வீட்டின் அருகே மயக்க நிலையில் இறக்கி விட்டுள்ளார் அந்த மாணவர். பின் வீட்டுக்குச் சென்ற மாணவி நடந்தவை குறித்து தன் தாயாரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து போலீஸில் தகவல் தெரிவிக்கப் படவே, சனிக்கிழமை நேற்று அந்தக் கல்லூரி மாணவர் நரேஷைக் கைது செய்த போலீஸார், அவரிடம் நடத்திய விசாரணையில் ராஜா, வெங்கடேஷ் ஆகியோரையும் கைது செய்தனர். பின், மூவரும் சிறையில் அடைக்கப் பட்டனர்.

தனியாக இருக்கும் பள்ளி மாணவிகள், இளம் பெண்கள் இது போல், விடுதிகளுக்கு அழைத்துச் செல்லப் பட்டு, சிதைக்கப்படும் சம்பவங்கள், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து குடிக்கச் செய்து பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் வெகுகாலமாக செய்திகளிலும் ஊடகங்களிலும் வந்து கொண்டிருக்கும் போதும், பெண்கள் இது போல் ஏமாறுவது பெரும் வேதனை அளிப்பதாக சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories