December 6, 2025, 2:34 PM
29 C
Chennai

மாமனார் சீண்டல்; மருமகள் தற்கொலை….!

susied - 2025

கிருஷ்ணகிரி அருகே மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த மாமனார்; மருமகள் விஷம் குடித்து தற்கொலை…!

கிருஷ்ணகிரி அடுத்துள்ள அக்ரஹாரம் பகுதியில் குடியிருந்து வருபவர் சந்தியா–கண்ணன் தம்பதியினர். இவர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கண்ணனின் மனைவி சந்தியாவிடம் அவரது மாமனார் முருகன் அவ்வப்போது தவறாக நடக்க முயல்வதும் அதை சந்தியா தடுப்பதுமாக இருந்து வந்துள்ளது.

இந்த கொடுமைகளை தனது கணவர் கண்ணன் மற்றும் தனது மாமியாரிடமும் தெரிவித்துள்ளார்.

அப்போது இது எல்லாம் சகஜம்தான் அனுசரித்துக்கொள் என்று சொல்லியுள்ளார். இதனால் மனமுடைந்த சந்தியா கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் நாகரசம்பட்டி காவல் நிலையத்திலும் மாமனாரின் பாலியல் சீண்டல் குறித்து புகார் அளித்துள்ளார்.

ஆனால் அந்த புகார்கள் மீத காவல் துறையினா் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த சந்தியாவை மாமனார் முருகன் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இது தொடர்பாக ஊர் பஞ்சாயத்தில் சந்தியா புகார் செய்துள்ளார்.

அதற்கு ஊர் நிர்வாகிகள் அலட்சியமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சந்தியா தனது தந்தை வீட்டுக்கு வந்து மாமனார் முருகன் தன்னிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து கூறியுள்ளார்.

பின்னர் வீட்டில் யாரும் இல்லாத போது சானிபவுடர் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்
.
இதனையடுத்து விஷம் குடித்த சந்தியாவை அவளது பெற்றோர் உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அழைத்து சென்றனா். அங்கு சந்தியாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டார் என கூறியுள்ளனர்.

இதனைதொடர்ந்து சந்தியாவின் பெற்றோர் நடந்த சம்பவத்தை கொண்டு சந்தியாவின் கணவர், மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனா்.

இதனடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories