நெல்லை அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்; கலெக்டர் ஷில்பா தகவல்.

silpa - 2026

நெல்லை அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

இசைப்பள்ளி

நெல்லை மாவட்ட அரசு இசைப்பள்ளி பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் செயல்பட்டு வருகிறது.

இங்கு குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

இசைப்பள்ளியில் பயில்வதற்கு மாணவ-மாணவிகளுக்கு வயது வரம்பு 12 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பயில வேண்டும்.

முதல் ஆண்டுக்கு ரூ.152-ம், 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.120-ம் கல்வி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

2019-2020-ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.

மாவட்ட அரசு இசைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள இலவச பஸ் பாஸ், ரெயில் கட்டண சலுகை வசதி, தங்கும் விடுதி வசதி, மாதம் தோறும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை ரூ.400 மற்றும் இலவச சீருடை, இலவச சைக்கிள், இலவச செருப்பு ஆகிவை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

3 ஆண்டு பயிற்சி

இந்த அரசு இசைப்பள்ளியில் 3 ஆண்டு பயிற்சி முடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு தேர்வு இயக்ககத்தால் தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

சான்றிதழ்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பணிமூப்பு அடிப்படையில் இசைப்பள்ளிகளில் மற்றும் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது.

அனைத்து மாணவ-மாணவிகளும் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர்ந்து இசையினைக் கற்று இசை ஆசிரியர்களாகவும், கலை வல்லுனர்களாகவும் உருவாகுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories