February 22, 2026, 4:09 PM
30.4 C
Chennai

கள்ளக்காதலனுடன் உல்லாசம்; நேரில் பார்த்த மூதாட்டி கொடூரக் கொலை…..!

kithau - 2026

கள்ளக்காதலை நேரில் பார்த்த மூதாட்டியை கொன்று சடலத்தை கிணற்றில் வீசிய சம்பவம் துறையூரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலையாளிகளை கைது செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

.
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த ஒசரப்பள்ளி காட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நல்லுச்சாமி என்பவரின் மனைவி கண்ணம்மா வயது (68) தனியாக வசித்து வந்தார்..

கடந்த 26ஆம் தேதி முதல் கண்ணம்மாவை காணவில்லை என்று குடும்பத்தினர் தேடி வந்தனர்.

இது குறித்து கண்ணம்மாவின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவே, போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.

நகைத்திருட்டு கும்பல் ஏதேனும் செய்து விட்டார்களா என்று தேடிய நிலையில் சில தினங்களுக்கு முன்பு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அருகில் உள்ள விவசாய கிணற்றிலிருந்து கண்ணம்மாவின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொலை செய்தது யாராக இருக்கும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கொலை செய்யப்பட்டது ஏன் கண்ணம்மா காணாமல் போன நேரத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் திருமால்குமரன் என்பவரின் மனைவி அமுதாவின் மீது போலீசின் பார்வை விழுந்தது.

கண்ணம்மா காணாமல் போனது குறித்து, அவரது மகள் ரேணுகாவிடம் கூறியதே அமுதாதான். அவரிடம் போலீசார் தங்கள் பாணியில் விசாரிக்கவே, கொலை செய்ததை ஒத்துக்கொண்டார். அமுதாவின் கணவர் திருமால்குமரனும் அவரது ஒரு மகனும் வெளிநாட்டில் இருக்கின்றனர்.

கணவரின் நண்பர் தமிழ்மாறன் என்பருடன் அமுதாவிற்கு தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.

அமுதா வீட்டிற்கு தமிழ்மாறன் வந்து போவதை கண்ணம்மா பார்த்து விட்டார்.

கள்ளக்காதல் ஜோடியின் கள்ளக்காதலை தெரிந்து கொண்ட கண்ணம்மா உறவினர்களிடமும் ஊர்காரர்களிடமும் தெரிவித்து விடுவாரோ என்று அஞ்சிய அமுதாவும் தமிழ்மாறனும் அவரை கொல்ல திட்டமிட்டனர்.

கண்ணம்மா உறங்கிக்கொண்டிருந்த போது தலையணையை வைத்து முகத்தில் அழுத்தி கொன்றனர்.

உடலை கொண்டு போய் கிணற்றில் வீசி விட்டதாக போலீசில் கூறியுள்ளார்.

இதனை தொடா்ந்து அமுதாவை, கைது செய்த போலீஸ் அமுதாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழ்மாறனையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனா்.

அமுதாவின் ஒரு மகன் ஏற்கனவே மாயமாகிவிட்டார், அவர் தானாக மாயமானாரா அல்லது கள்ளக்காதல் விவகாரம் தெரிந்து அவரும் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஒரு கள்ளக்காதல் கடைசியில் கொலையில் முடிந்துள்ளது. இந்த சம்பவம் துறையூரில் பரபரப்பாக பேசப்படுகிறது,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories