கள்ளக்காதலனுடன் உல்லாசம்; நேரில் பார்த்த மூதாட்டி கொடூரக் கொலை…..!

kithau - 2026

கள்ளக்காதலை நேரில் பார்த்த மூதாட்டியை கொன்று சடலத்தை கிணற்றில் வீசிய சம்பவம் துறையூரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலையாளிகளை கைது செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

.
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த ஒசரப்பள்ளி காட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நல்லுச்சாமி என்பவரின் மனைவி கண்ணம்மா வயது (68) தனியாக வசித்து வந்தார்..

கடந்த 26ஆம் தேதி முதல் கண்ணம்மாவை காணவில்லை என்று குடும்பத்தினர் தேடி வந்தனர்.

இது குறித்து கண்ணம்மாவின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவே, போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.

நகைத்திருட்டு கும்பல் ஏதேனும் செய்து விட்டார்களா என்று தேடிய நிலையில் சில தினங்களுக்கு முன்பு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அருகில் உள்ள விவசாய கிணற்றிலிருந்து கண்ணம்மாவின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொலை செய்தது யாராக இருக்கும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கொலை செய்யப்பட்டது ஏன் கண்ணம்மா காணாமல் போன நேரத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் திருமால்குமரன் என்பவரின் மனைவி அமுதாவின் மீது போலீசின் பார்வை விழுந்தது.

கண்ணம்மா காணாமல் போனது குறித்து, அவரது மகள் ரேணுகாவிடம் கூறியதே அமுதாதான். அவரிடம் போலீசார் தங்கள் பாணியில் விசாரிக்கவே, கொலை செய்ததை ஒத்துக்கொண்டார். அமுதாவின் கணவர் திருமால்குமரனும் அவரது ஒரு மகனும் வெளிநாட்டில் இருக்கின்றனர்.

கணவரின் நண்பர் தமிழ்மாறன் என்பருடன் அமுதாவிற்கு தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.

அமுதா வீட்டிற்கு தமிழ்மாறன் வந்து போவதை கண்ணம்மா பார்த்து விட்டார்.

கள்ளக்காதல் ஜோடியின் கள்ளக்காதலை தெரிந்து கொண்ட கண்ணம்மா உறவினர்களிடமும் ஊர்காரர்களிடமும் தெரிவித்து விடுவாரோ என்று அஞ்சிய அமுதாவும் தமிழ்மாறனும் அவரை கொல்ல திட்டமிட்டனர்.

கண்ணம்மா உறங்கிக்கொண்டிருந்த போது தலையணையை வைத்து முகத்தில் அழுத்தி கொன்றனர்.

உடலை கொண்டு போய் கிணற்றில் வீசி விட்டதாக போலீசில் கூறியுள்ளார்.

இதனை தொடா்ந்து அமுதாவை, கைது செய்த போலீஸ் அமுதாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழ்மாறனையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனா்.

அமுதாவின் ஒரு மகன் ஏற்கனவே மாயமாகிவிட்டார், அவர் தானாக மாயமானாரா அல்லது கள்ளக்காதல் விவகாரம் தெரிந்து அவரும் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஒரு கள்ளக்காதல் கடைசியில் கொலையில் முடிந்துள்ளது. இந்த சம்பவம் துறையூரில் பரபரப்பாக பேசப்படுகிறது,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

Topics

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Entertainment News

Popular Categories