தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் போட்டோ எடுத்த 1 மணிநேரத்தில் கிடைக்கும் ஆா்டிஓ அலுவலகங்களில் அதிரடி விளம்பரம்….!

LICENCE 2 - 2026
தமிழகத்தின் பெரும்பாலான ஆர்டிஓ அலுவலகங்களில் விண்ணப்பித்தவர் புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்தில் லைசன்ஸ் பெறலாம் என விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

லைசென்ஸ் வாங்குவது என்பது முன்பெல்லாம், மிக கடினமான ஒன்றாக பார்க்கப்பட்டது.

இந்தியன் படத்தில் நடிகர் கமல்ஹாசன் லைசென்ஸ் பெறுவது எவ்வளவு கடினம் என்பது பற்றி சொல்லியிருப்பார். அந்த அளவுக்கு மிக கடினமாகவே இருந்தது.

அந்த படம் வந்து 28 வருடங்களுக்கு பிறகு இப்போது ஓட்டுநர் உரிமம் பெறுவது ஒரு மணி நேரத்தில் சாத்தியம் என்பதை ஆர்டிஓ அலுவலங்கள் நிரூபித்துள்ளன.

தமிழகத்தில் மொத்தம் 70க்கும்மேற்பட்ட இடங்களில் ஆர்டிஓ அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த அலுவலகங்களில் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், ஆர்சி புத்தகத்தில் பெயர் மாற்றுதல், ஆர்சி புத்தகத்தின் நகல் பெறுதல் போன்ற பல்வேறு விதமான பணிகள் நடந்து வருகிறது.

தற்போது ஆர்டிஓ அலுவலகங்களில் பல்வேறு பணிகள் இணையதளம் வழியாக மேற்கொள்ளும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

அதன்படி, வாகன உரிமை மாற்றம் செய்தல், தகுதிச்சான்று புதுப்பித்தல், தவணை கொள்முதல், தவணை ரத்து போன்ற அனைத்து பணிகளும் இணையதளத்தில் செய்யக்கூடிய வசதி கொண்டுவரப்பட்து.

இப்போது விண்ணப்பதாரர் புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்தில் லைசென்ஸ் வழங்கப்படுகிறது. இதனை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஆர்டிஒ அலுவலங்களில் விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளது.

அந்த விளம்பரங்களில், ஓட்டுநர் உரிமம் தொடர்பான பணிகளுக்கு விண்ணப்பதாரர் புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்தில் ஸ்மார்ட் கார்ட் வடிவிலான ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அலுவலகங்கள் கணிணி மயமாக்கப்பட்டுள்ளதால் பிற அலுவலகங்களிலிருந்து என்ஓசி வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது மொபைல் எண், ஆதார் எண், இமெயில் முகவரியை தவறாமல் குறிப்பிட வேண்டும் என விளம்பரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories