தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் போட்டோ எடுத்த 1 மணிநேரத்தில் கிடைக்கும் ஆா்டிஓ அலுவலகங்களில் அதிரடி விளம்பரம்….!

LICENCE 2 - 2026
தமிழகத்தின் பெரும்பாலான ஆர்டிஓ அலுவலகங்களில் விண்ணப்பித்தவர் புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்தில் லைசன்ஸ் பெறலாம் என விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

லைசென்ஸ் வாங்குவது என்பது முன்பெல்லாம், மிக கடினமான ஒன்றாக பார்க்கப்பட்டது.

இந்தியன் படத்தில் நடிகர் கமல்ஹாசன் லைசென்ஸ் பெறுவது எவ்வளவு கடினம் என்பது பற்றி சொல்லியிருப்பார். அந்த அளவுக்கு மிக கடினமாகவே இருந்தது.

அந்த படம் வந்து 28 வருடங்களுக்கு பிறகு இப்போது ஓட்டுநர் உரிமம் பெறுவது ஒரு மணி நேரத்தில் சாத்தியம் என்பதை ஆர்டிஓ அலுவலங்கள் நிரூபித்துள்ளன.

தமிழகத்தில் மொத்தம் 70க்கும்மேற்பட்ட இடங்களில் ஆர்டிஓ அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த அலுவலகங்களில் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், ஆர்சி புத்தகத்தில் பெயர் மாற்றுதல், ஆர்சி புத்தகத்தின் நகல் பெறுதல் போன்ற பல்வேறு விதமான பணிகள் நடந்து வருகிறது.

தற்போது ஆர்டிஓ அலுவலகங்களில் பல்வேறு பணிகள் இணையதளம் வழியாக மேற்கொள்ளும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, வாகன உரிமை மாற்றம் செய்தல், தகுதிச்சான்று புதுப்பித்தல், தவணை கொள்முதல், தவணை ரத்து போன்ற அனைத்து பணிகளும் இணையதளத்தில் செய்யக்கூடிய வசதி கொண்டுவரப்பட்து.

இப்போது விண்ணப்பதாரர் புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்தில் லைசென்ஸ் வழங்கப்படுகிறது. இதனை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஆர்டிஒ அலுவலங்களில் விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளது.

அந்த விளம்பரங்களில், ஓட்டுநர் உரிமம் தொடர்பான பணிகளுக்கு விண்ணப்பதாரர் புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்தில் ஸ்மார்ட் கார்ட் வடிவிலான ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அலுவலகங்கள் கணிணி மயமாக்கப்பட்டுள்ளதால் பிற அலுவலகங்களிலிருந்து என்ஓசி வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது மொபைல் எண், ஆதார் எண், இமெயில் முகவரியை தவறாமல் குறிப்பிட வேண்டும் என விளம்பரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories