‘நீயா,, நானா.“., செவிலியா்கள்,  டீன்“ போராட்டத்தால் பாதிக்கப்படும் அப்பாவி நோயாளிகள் ……!

KARUR GH 2 - 2026நோயாளிக்கு கொடுக்கிற பாலைக்கூட விட்டுவைக்கலங்க!’ – கரூரில் டீனுக்கு எதிராக 3வது நாளாக செவிலியர்கள் போராட்டம்!

செவிலியர் மீது மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் நடவடிக்கை எடுத்துவிட்டதாகக் கூறி செவிலியர்கள் தொடர் போராட்டம் நடத்துவதால், கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனை டீன் ஆக இருப்பவர் ரோஸி வெண்ணிலா. இவர்மீது கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, கரூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றிவரும் செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதனால், கோபமான டீன், மருத்துவர்கள் மூலம், `நோயாளிகளுக்குப் பணிசெய்வதை விட்டுவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட செல்வராணி என்கிற செவிலியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிறார்’ என்று உத்தரவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், `எங்களை வதைக்கும் டீனை மாற்றும்வரை பணிசெய்யமாட்டோம்’ என்றபடி, இருபதுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில் டீன் ரோஸி வெண்ணிலா, அத்துமீறி தனது அறைக்குள் நுழைந்துவிட்டதாக மூன்று பத்திரிகையாளர்கள் மீது கரூர் நகரக் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, விவகாரம் விறுவிறுப்பாகிக்கொண்டிருக்கிறது.

இதற்கிடையில், கரூர் ஆர்.டி.ஓ சரவணமூர்த்தி செவிலியர்களிடம் இருமுறை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும், செவிலியர்களின் போராட்டம் மூன்றாவது நாளாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் கூறியதாவது கடந்த “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதல்வராக ரோஸி வெண்ணிலா பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உள்ள கட்டடத்தின் மேல் குளிரூட்டப்பட்ட அறையில் தனது உறவினர்களுடன் சட்டவிரோதமாகத் தங்கி இருக்கிறார்.

அதோடு, ஒப்பந்தப் பணியாளர்களை மருத்துவமனையில் பணியாற்றவிடாமல், கட்டாயப்படுத்தி அவர்களைத் தனது சொந்த வேலைக்குப் பயன்படுத்துகிறார்.

அதேபோல், நோயாளிகளுக்கு வழங்கப்படும் பால், காய்கறிகள் உள்ளிட்டப் பொருள்களையும் தனது சொந்த பயன்பாட்டுக்குப் பயன்படுத்துகிறார்.

மருத்துவர்கள் மற்றும் லேப் டெக்னீஷியன்கள் செய்யக்கூடிய வேலைகளையும் சேர்த்து எங்களையே பார்க்கச் சொல்கிறார்.

இதனால், எங்களுக்கு மன அழுத்தம் உண்டாகிறது. அதன் காரணமாக, பத்துக்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கு கருச்சிதைவுகூட ஏற்பட்டுள்ளது.

25 தொழில்நுட்ப உதவியாளர்கள் இருந்தும், ரத்தம் சேகரிக்கச் சொல்லி எங்களை வற்புறுத்துகிறார்.

மருத்துவமனைப் பயன்பாட்டுக்கு வரும் பணத்தை தனது சொந்தப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்துகிறார்.

அதனால், இவரிடமிருந்து எங்களைக் காக்க வலியுறுத்தி, ஒருநாள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

அதைச் செய்தி சேகரிக்க வந்த மூன்று பத்திரிகையாளர்கள் மீது, `என் அறைக்குள் அத்துமீறி நுழைந்தார்கள்’ என்று கேஸ் கொடுத்துட்டார்.

செல்வராணி என்ற செவிலியரையும் தற்காலிக பணிநீக்கம் செய்துவிட்டார். அவரை மாற்றும் வரை எங்கள் போராட்டம் ஓயாது” என்றார்கள்.

இந்த நிலையில், பத்திரிகையாளர்களிடம் பேசிய டீன் ரோஸி வெண்ணிலா, “எல்லாம் பொய்க்குற்றச்சாட்டுகள். நோயாளிகளின் உணவுகளுக்காக ஒதுக்கப்படும் முழுநிதியையும் முறையாகச் செலவிட வேண்டும் என்பதால், ஏழு நாள்களும் நோயாளிகளுக்கு உணவு வழங்கச் சொல்லியிருக்கிறேன்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு தினம் இரண்டு முட்டைகள் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இது ஒப்பந்ததாரருக்குப் பிடிக்கவில்லை. அவர்தான் செவிலியர்களைத் தூண்டிவிட்டு, இப்படிப் போராட வைக்கிறார்.

சில செவிலியர்களைத்தவிர, மற்றவர்கள் சிறப்பாக பணியாற்றக்கூடியவர்கள். ஆனால், சிலர் மட்டும் இப்படி பணிசெய்யாமல் போராட்டம் செய்கிறார்கள்.

என்மீது அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். இந்தச் செவிலியர்களின் போராட்டத்தால், 1800-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

இந்நிலையில், “இவர்களின் சண்டைகளால் நோயாளிகளுக்குத் தகுந்த சிகிச்சை கிடைக்கவில்லை.

அவசரப் பிரிவுகளில் இருக்கும் நோயாளிகளைக் கவனிக்க ஆளில்லாமல், அவர்கள் நிலை அபாயத்துக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் சண்டை முடியலன்னா, இவர்களை எதிர்த்து, நாங்க நோயாளிகளோடு போராடுவோம்” என்று சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories