‘நீயா,, நானா.“., செவிலியா்கள்,  டீன்“ போராட்டத்தால் பாதிக்கப்படும் அப்பாவி நோயாளிகள் ……!

KARUR GH 2 - 2026நோயாளிக்கு கொடுக்கிற பாலைக்கூட விட்டுவைக்கலங்க!’ – கரூரில் டீனுக்கு எதிராக 3வது நாளாக செவிலியர்கள் போராட்டம்!

செவிலியர் மீது மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் நடவடிக்கை எடுத்துவிட்டதாகக் கூறி செவிலியர்கள் தொடர் போராட்டம் நடத்துவதால், கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனை டீன் ஆக இருப்பவர் ரோஸி வெண்ணிலா. இவர்மீது கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, கரூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றிவரும் செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதனால், கோபமான டீன், மருத்துவர்கள் மூலம், `நோயாளிகளுக்குப் பணிசெய்வதை விட்டுவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட செல்வராணி என்கிற செவிலியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிறார்’ என்று உத்தரவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், `எங்களை வதைக்கும் டீனை மாற்றும்வரை பணிசெய்யமாட்டோம்’ என்றபடி, இருபதுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில் டீன் ரோஸி வெண்ணிலா, அத்துமீறி தனது அறைக்குள் நுழைந்துவிட்டதாக மூன்று பத்திரிகையாளர்கள் மீது கரூர் நகரக் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, விவகாரம் விறுவிறுப்பாகிக்கொண்டிருக்கிறது.

ALSO READ:  தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

இதற்கிடையில், கரூர் ஆர்.டி.ஓ சரவணமூர்த்தி செவிலியர்களிடம் இருமுறை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும், செவிலியர்களின் போராட்டம் மூன்றாவது நாளாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் கூறியதாவது கடந்த “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதல்வராக ரோஸி வெண்ணிலா பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உள்ள கட்டடத்தின் மேல் குளிரூட்டப்பட்ட அறையில் தனது உறவினர்களுடன் சட்டவிரோதமாகத் தங்கி இருக்கிறார்.

அதோடு, ஒப்பந்தப் பணியாளர்களை மருத்துவமனையில் பணியாற்றவிடாமல், கட்டாயப்படுத்தி அவர்களைத் தனது சொந்த வேலைக்குப் பயன்படுத்துகிறார்.

அதேபோல், நோயாளிகளுக்கு வழங்கப்படும் பால், காய்கறிகள் உள்ளிட்டப் பொருள்களையும் தனது சொந்த பயன்பாட்டுக்குப் பயன்படுத்துகிறார்.

மருத்துவர்கள் மற்றும் லேப் டெக்னீஷியன்கள் செய்யக்கூடிய வேலைகளையும் சேர்த்து எங்களையே பார்க்கச் சொல்கிறார்.

இதனால், எங்களுக்கு மன அழுத்தம் உண்டாகிறது. அதன் காரணமாக, பத்துக்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கு கருச்சிதைவுகூட ஏற்பட்டுள்ளது.

25 தொழில்நுட்ப உதவியாளர்கள் இருந்தும், ரத்தம் சேகரிக்கச் சொல்லி எங்களை வற்புறுத்துகிறார்.

மருத்துவமனைப் பயன்பாட்டுக்கு வரும் பணத்தை தனது சொந்தப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்துகிறார்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

அதனால், இவரிடமிருந்து எங்களைக் காக்க வலியுறுத்தி, ஒருநாள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

அதைச் செய்தி சேகரிக்க வந்த மூன்று பத்திரிகையாளர்கள் மீது, `என் அறைக்குள் அத்துமீறி நுழைந்தார்கள்’ என்று கேஸ் கொடுத்துட்டார்.

செல்வராணி என்ற செவிலியரையும் தற்காலிக பணிநீக்கம் செய்துவிட்டார். அவரை மாற்றும் வரை எங்கள் போராட்டம் ஓயாது” என்றார்கள்.

இந்த நிலையில், பத்திரிகையாளர்களிடம் பேசிய டீன் ரோஸி வெண்ணிலா, “எல்லாம் பொய்க்குற்றச்சாட்டுகள். நோயாளிகளின் உணவுகளுக்காக ஒதுக்கப்படும் முழுநிதியையும் முறையாகச் செலவிட வேண்டும் என்பதால், ஏழு நாள்களும் நோயாளிகளுக்கு உணவு வழங்கச் சொல்லியிருக்கிறேன்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு தினம் இரண்டு முட்டைகள் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இது ஒப்பந்ததாரருக்குப் பிடிக்கவில்லை. அவர்தான் செவிலியர்களைத் தூண்டிவிட்டு, இப்படிப் போராட வைக்கிறார்.

சில செவிலியர்களைத்தவிர, மற்றவர்கள் சிறப்பாக பணியாற்றக்கூடியவர்கள். ஆனால், சிலர் மட்டும் இப்படி பணிசெய்யாமல் போராட்டம் செய்கிறார்கள்.

என்மீது அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். இந்தச் செவிலியர்களின் போராட்டத்தால், 1800-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

இந்நிலையில், “இவர்களின் சண்டைகளால் நோயாளிகளுக்குத் தகுந்த சிகிச்சை கிடைக்கவில்லை.

ALSO READ:  தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

அவசரப் பிரிவுகளில் இருக்கும் நோயாளிகளைக் கவனிக்க ஆளில்லாமல், அவர்கள் நிலை அபாயத்துக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் சண்டை முடியலன்னா, இவர்களை எதிர்த்து, நாங்க நோயாளிகளோடு போராடுவோம்” என்று சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories