நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள சுற்றுலாத் தலமான குற்றாலம் பகுதியில் உற்பத்தியாக, அருவியாகப் பாய்ந்து பல்வேறு குளங்களை வளப்படுத்தி சீவலப்பேரி அருகே தாமிரபரணியில் கலக்கும் தாமிரபரணியின் துணை நதி சிற்றாறு.
குற்றாலம் பகுதியில் அருவிக் கரையில் இருந்து சிற்றாறு பாயும் பகுதியில் பல்வேறு குப்பைகள், ஆக்கிரமிப்புகள் என ஆற்றின் போக்கு அங்கங்கே தேங்கி, நீர் செல்ல வழியின்றி இருந்தது.
இந்நிலையில், சிற்றாற்றை தூய்மைப் படுத்த சென்னை அண்ணா பல்கலை., இணை பேராசிரியர் சக்திநாதன் தலைமையில் ஒரு குழு அண்ணா பல்கலை கிராம வளர்ச்சித் திட்டம் மூலமாக செயல்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் நடைபெற்று வரும் இந்தத் திட்டத்தில் ஆறுகள் தூய்மைப் படுத்துதல், கரைகளை பலப் படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் என பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், குற்றாலத்தில் சிற்றாற்றை தூய்மைப் படுத்தும் பணிக்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷிடம் ரூபாய் மூன்று லட்சத்திற்கான காசோலையை ரோட்டரி மாவட்ட ஆளுநர் கே.ராஜகோபாலன் வழங்கினார்.